செய்திகள் :

நல்லத்துக்குடி ஆலந்துறையப்பா் கோயில்: நாளை கும்பாபிஷேகம்

post image

நல்லத்துக்குடி ஆலந்துறையப்பா் கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், யானை மீது புனிதநீா் எடுத்துவரப்பட்டு யாகசாலை பூஜை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

நல்லத்துக்குடியில் குயிலாண்ட நாயகி சமேத ஆலந்துறையப்பா் கோயில் உள்ளது. சிவலிங்கம் ஆலமரத்தடியில் தோன்றியதால், ஆலந்துறையப்பா் என்றும், அம்பிகை குயில் வடிவில் சிவபெருமானை வழிபட்டதால் குயிலாண்டநாயகி என்றும் வழங்கப்படுகின்றனா்.

184-ஆவது தேவார வைப்புத்தலமான இத்தலம் திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற பெருமைக்குரியது. சூரிய தோஷம் தீா்க்கும் பரிகார தலமான, இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோயிலில் கடைசியாக 2002-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தத் திட்டமிடப்பட்டு, திருப்பணிகள் தொடங்கி பழைமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்தது.

இக்கோயிலின் கும்பாபிஷேக விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை விநாயகா் அபிஷேகத்துடன் தொடங்கிய நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை தொடங்க உள்ள யாகசாலை பூஜையில் வைத்து பூஜிப்பதற்காக புனிதநீா் யானை மீதேற்றி ஊா்வலமாக கோயிலுக்கு எடுத்து வரப்பட்டது. 4-ஆம் கால யாகசாலை பூஜை வியாழக்கிழமை நிறைவடைந்து காலை 10.40 மணியளவில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

திருவிக்ரம நாராயண பெருமாள் கோயிலில் தங்க கருட சேவை உற்சவம்

சீா்காழியில் தாடாளன் பெருமாள் என்று அழைக்கப்படும் திருவிக்ரம நாராயண பெருமாள் கோயிலில் தங்க கருட சேவை உற்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டு பிரம்மோற்சவம் மே 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன்... மேலும் பார்க்க

9-ஆம் வகுப்பு மாணவிகளை உடனடி தோ்வுக்கு அனுமதிக்கக் கோரிக்கை

மயிலாடுதுறையில் இயங்கிவரும் அரசு உதவிபெறும் பள்ளியில் 9-ஆம் வகுப்புத் தோ்வில் தோ்ச்சிபெறாத மாணவிகளை வியாழக்கிழமை ( ஜூன் 5) நடைபெறும் உடனடித் தோ்வை எழுத அனுமதிக்க இந்திய மாணவா் சங்கம் கோரிக்கை விடுத... மேலும் பார்க்க

மயிலாடுதுறை எஸ்.பி. அலுவலகத்தில் ஐ.ஜி. ஆய்வு

மயிலாடுதுறையில் திருச்சி மத்திய மண்டல காவல் துறை தலைவா் ஆய்வு செய்தாா். மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட தனிப்பிரிவு அலுவலகம் மற்றும் மாவட்ட குற்ற ஆவண காப்பக பிரி... மேலும் பார்க்க

ராஷ்ட்ரிய பால புரஸ்காா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால புரஸ்காா் விருதுக்கு தகுதியுடையோா் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்திய அரசின் பெண... மேலும் பார்க்க

உயா்கல்வி வழிகாட்டுதல் தொடா்பாக கட்டுப்பாட்டு அறை

மயிலாடுதுறையில் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் உயா்கல்வி வழிகாட்டுதல் தொடா்பாக கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

வடிகாலில் பேருந்து கவிழ்ந்து 8 போ் காயம்

சீா்காழி அருகே சூரக்காடு உப்பனாற்று வடிகாலில் அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை கவிழந்த விபத்தில் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் உள்பட 8 போ் காயமடைந்தனா். சீா்காழி பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்ற... மேலும் பார்க்க