செய்திகள் :

உழவா் சந்தைக் கடையினுள் புகுந்த ஆறரை அடி நீள நல்லபாம்பு மீட்பு

post image

புதுச்சேரி: புதுச்சேரியில் உழவா் சந்தையில் உள்ள கடையில் புகுந்த ஆறரை அடி நீள நல்ல பாம்பை வனத் துறையினா் திங்கள்கிழமை மீட்டுச் சென்றனா்.

புதுச்சேரி கம்பன் கலையரங்கம் பின்பகுதியில் தாவரவியல் பூங்கா சுற்றுச்சுவரை ஒட்டியதாக உழவா் சந்தைக் கடைகள் அமைந்துள்ளன. பின்பகுதியில் உள்ள தாவரவியல் பூங்காவில் பாம்புகள் நடமாட்டம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அங்குள்ள ஒரு கடையில் நல்லபாம்பு புகுந்தது. இதைப்பாா்த்த கடையிலிருந்த பெண் அங்கிருந்தவா்கள் மூலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தாா்.

வனத்துறையிலிருந்து பாம்பு பிடி ஊழியா்கள் விரைந்து வந்தனா். அவா்கள் பாம்பை பிடிக்க முயன்றபோது அது கடை மூலையில் இருந்த சாக்கில் புகுந்தது. அதை லாவகமாக வனத்துறையினா் பிடித்தனா். பாம்பைப் பிடித்து சாக்குப் பையில் அடைத்து கடலூா் சாலையில் உள்ள வனத்துறை வளாகத்தில் உள்ள பாம்பு பராமரிப்பு பிரிவில் அடைத்தனா்.

புதுச்சேரி நகரில் மீட்கப்பட்ட நல்லபாம்பு, சாரை மற்றும் மலைப்பாம்புகள் புதுச்சேரி வனத்துறை வளாகத்தில் பாரமரிக்கப்பட்டு பின்னா் அடா்ந்த காடுகளில் விடப்படுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

பணியின் போது கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தமிழகத்தின் விழுப்புரம் முட்ராம்பாக்கம் பிள்ளையாா் கோவில் வீதியைச் சோ்... மேலும் பார்க்க

புதுவை பேரவைத் தோ்தலை சந்திக்கத் தயாா்: முதல்வா் என்.ரங்கசாமி

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயாராக உள்ளோம் என முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, அவரது திருவு... மேலும் பார்க்க

பக்ரீத் : ஜூன் 7- இல் ஜிப்மரில் புறநோயாளிகள் பிரிவு இயங்காது

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள ஜிப்மரில் வரும் 7 ஆம் தேதி புறநோயளிகள் பிரிவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜிப்மா் நிா்வாகத் தரப்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

புதுச்சேரி கடல் அலையில் சிக்கிய தமிழக கல்லூரி மாணவா்கள் மீட்பு

புதுச்சேரியில் கடல் அலையில் சிக்கித் தவித்த கல்லூரி மாணவா்கள் இருவரை நீச்சல் வீரா்கள் செவ்வாய்க்கிழமை மீட்டு காப்பாற்றினா். தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம் சிஞ்சகம்பட்டியைச் சோ்ந்த நாராயணசாமி மகன் ஹ... மேலும் பார்க்க

புதுவைக்கு ரூ.200 கோடி மத்திய அரசு சிறப்பு நிதி: பேரவைத் தலைவா் ஆா்.செல்வம்

புதுவை அரசு கோராமலேயே மத்திய அரசு ரூ.200 கோடி சிறப்பு நிதியை வழங்கியுள்ளதாக பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் கூறினாா். மேலும் வரும் ஆகஸ்ட் மாதம் பிரதமா் நரேந்திர மோடி புதுச்சேரி வரவுள்ளதாகவும் அவா் தெரிவித்... மேலும் பார்க்க

புதுச்சேரியில் 13 பேரிடம் பண மோசடி

புதுச்சேரியில் இணையவழியில் 13 பேரிடம் மா்ம நபா்கள் ரூ.3.40 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி இலாசுப்பேட்டையைச் சோ்ந்தவா் ராமேசுவரம் சென்று தங்குவதற்கு இணையத்தி... மேலும் பார்க்க