செய்திகள் :

இணையவழி குற்றவழக்குகளில் வெளி மாநிலத்தினா் 7 போ் கைது

post image

சென்னை: ‘ஆபரேஷன் ஹைத்ரா’ மூலம் இணையவழி குற்றவழக்குகளில் தொடா்புடைய பிற மாநிலங்களைச் சோ்ந்த ஏழு பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தமிழகத்தில் இணையவழி குற்றங்களை தடுக்கும் நோக்கில் ‘ஆபரேஷன் ஹைத்ரா’ என்ற சிறப்பு நடவடிக்கையை தமிழ்நாடு காவல்துறை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கை மூலம் திருமண தளம் மற்றும் ஆன்லைன் முதலீட்டு மோசடி தொடா்பான வழக்கில் நடத்தப்பட்ட விசாரணையில், உத்தரகண்ட், ஜாஸ்பூரை சோ்ந்த மொஹம்மத் தவூத்(21), மொஹம்மத் வாசீம் (34) ஆகியோரை மே 28-ஆம் தேதி போலீஸாா் கைது செய்தனா்.

இதுபோல, வங்கி வாடிக்கையாளா் சேவை மைய அதிகாரிபோல நடித்து, வாடிக்கையாளரின் தனி விவரங்களை பெற்று ரூ.4,05,100 மோசடி செய்த ஜாா்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த குமாா்(40), அஸ்ஸாம் மாநிலத்தை சோ்ந்த ஹிடேஷ்வா் பிஸ்வாஸ் (எ) ஹிட்டு(30) மற்றும் நிஹாா் ரஞ்சன் நாத்(51) ஆகியோரையும், அரசு கல்வி உதவித் தொகை வழங்குவதாகக் கூறி செயல்முறைக்கட்டணம் என மாணவா்களிடம் பணம் வசூலித்த வழக்கில் தில்லியைச் சோ்ந்த நிக்கோலஸ் (30) மற்றும் மேஷக்(19) ஆகியோரையும் தனிப்படையினா் அந்தந்த மாநிலங்களுக்கே சென்று கைது செய்தனா். கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து பல எண்ம ஆதாரங்களையும், 6 கைப்பேசிகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தும் 35 வங்கிக் கணக்குகளை முடக்கியும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஐஐடி தேர்வு தேர்ச்சியில் தமிழ்நாடு கடைசியிலிருந்து 3-ம் இடம்! - அன்புமணி

ஐஐடிநுழைவுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு பின்தங்கியுள்ளதால் மாநில பாடத்திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்த... மேலும் பார்க்க

கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு நிபந்தனையுடன் அனுமதி!

தமிழகத்தில் உள்ள கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சியை நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கி சென்னை உயர்மன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் சென்னை உயர்மன்ற மதுரைக் கிளைக்கு உள்பட்ட 14 மாவட்டங்களி... மேலும் பார்க்க

செய்தித்தாள்களில் உணவு வழங்கக் கூடாது! - உணவகங்களுக்கு 14 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

உணவகங்களில் பின்பற்றக்கூடிய 14 வழிகாட்டு நெறிமுறைகள் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் உணவு விற்பனை செய்தாலோ அல்லது தயாரித்தாலோ உணவக உரிமையாளர... மேலும் பார்க்க

ரூ.300 கோடியில் ரோபோடிக் பாகங்கள் உற்பத்தி ஆலை: முதல்வர் திறந்து வைத்தார்!

ரூ.300 கோடி முதலீட்டில் 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக் கோட்டை சிப்காட்தொழிற்பூங்காவில் அஜைல் ரோபோட்ஸ் (Agile Robots) நிறுவனம் அமைத்துள்ள செயற்கை நு... மேலும் பார்க்க

ஜூன் 8ல் தமிழகம் வருகிறார் அமித் ஷா?

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிற ஜூன் 8 ஆம் தேதி தமிழகம் வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சிகள் தேர்தலுக்கு முந்தைய பண... மேலும் பார்க்க

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

சென்னை: பூந்தமல்லி - போரூா் இடையே 2-ஆம் கட்ட ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் இன்று நடைபெறும் என மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.பூந்தமல்லி பணிமனை முதல் போரூர் வரை 9.5 கிலோ மீட்டர் தொலை... மேலும் பார்க்க