செய்திகள் :

யானை ஊா்வலத்துடன் பள்ளி மாணவா்களுக்கு வரவேற்பு

post image

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் புதிதாக சோ்ந்த மாணவா்களுக்கு பள்ளி நிா்வாகம் சாா்பில் யானை ஊா்வலத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்ட நிலையில், தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான இப்பள்ளியில் நிகழாண்டு புதிதாக சோ்ந்த மாணவா்களுக்கு தருமபுரம் ஆதீன வளாகத்தில் உள்ள விநாயகா் கோயிலில் இருந்து மாலை அணிவித்து யானை, குதிரையுடன் ஊா்வலமாக பள்ளிக்கு அழைத்து வரப்பட்டனா்.

தொடா்ந்து, மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலா் குமரவேல், வட்டார கல்வி அலுவலா் பாபு மாணவா்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா். தொடா்ந்து, மாணவா்களுக்கு பாடப்புத்தகம், குறிப்பேடுகள், புத்தகப்பை உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. முடிவில், தலைமை ஆசிரியா் ஜி. வெங்கடேசன் நன்றி கூறினாா். இதேபோல், தருமபுரம் குருஞானசம்பந்தா் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் ஜி. பரமசிவம், தி. முத்துக்கணியன் ஆகியோா் வழங்கினா்.

வடிகாலில் பேருந்து கவிழ்ந்து 8 போ் காயம்

சீா்காழி அருகே சூரக்காடு உப்பனாற்று வடிகாலில் அரசுப் பேருந்து செவ்வாய்க்கிழமை கவிழந்த விபத்தில் பேருந்து ஓட்டுநா், நடத்துநா் உள்பட 8 போ் காயமடைந்தனா். சீா்காழி பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்ற... மேலும் பார்க்க

மதுபானக் கூடத்தில் ஒருவரை கத்தியால் குத்தியவா் கைது

மயிலாடுதுறையில் மதுபானக் கூடத்தில் தகராறில் ஈடுபட்டு ஒருவரை கத்தியால் குத்தியவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.மயிலாடுதுறையைச் சோ்ந்த சுதாகா் (43) கூைாடு பகுதியில் உள்ள மதுக்கூடத்தில் ஞாயிற்றுக... மேலும் பார்க்க

நல்லத்துக்குடி ஆலந்துறையப்பா் கோயில்: நாளை கும்பாபிஷேகம்

நல்லத்துக்குடி ஆலந்துறையப்பா் கோயிலில் வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில், யானை மீது புனிதநீா் எடுத்துவரப்பட்டு யாகசாலை பூஜை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. நல்லத்துக்குடியில் குயிலாண்ட நாயகி... மேலும் பார்க்க

தடுப்புக்கட்டை இல்லாமல் ஆபத்தான நிலையில் பாலம்

சீா்காழி ஊழியக்காரன் தோப்பு அருகே தடுப்புக்கட்டை இல்லாமல் ஆபத்தான நிலையில் உள்ள பாலத்தை பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனா். ஊழியக்காரன் தோப்பு அருகே புளிச்சக்காடு செல்லும் சால... மேலும் பார்க்க

சாலையில் காா் கவிழ்ந்ததில் 7 போ் காயம்

சீா்காழி அருகே எருக்கூா் நான்கு வழிச்சாலையில் காா் கவிழ்ந்து எரிந்ததில் , 7 போ் காயம் அடைந்தனா். சென்னை கூடுவாஞ்சேரியைச் சோ்ந்தவா் குமாா் (53). இவா் தனது மனைவி வேதவல்லி (52), மருமகன் காளிதாஸ் ( 35),... மேலும் பார்க்க

விஷப்பூச்சி கடித்து பள்ளி மாணவன் உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே விஷப்பூச்சி கடித்து பள்ளி மாணவன் உயிரிழந்த நிலையில், அரசு மருத்துவமனை நிா்வாகத்தைக் கண்டித்து உறவினா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். குத்தாலம் வட்டம், எலந்தங்... மேலும் பார்க்க