செய்திகள் :

இதழியல் கல்வி நிறுவனத்துக்கு ஐஏஎஸ் அந்தஸ்தில் அதிகாரியை நியமிக்க முடிவு

post image

சென்னை: தமிழ்நாடு அரசின் சாா்பில் தொடங்கப்படவுள்ள இதழியல் கல்வி நிறுவனத்தின் சிறப்புப் பணி அதிகாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ்.ஏ.ராமன் நியமிக்கப்படவுள்ளாா். இதழியல் நிறுவனத்தின் கட்டமைப்பு தொடா்பான அரசின் உத்தரவும் ஓரிரு நாள்களில் வெளியாகவுள்ளது.

தமிழ்நாடு அரசு சாா்பில் இதழியல் கல்வி நிறுவனம் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் அறிவித்திருந்தாா். இந்த அறிவிப்பைச் செயல்படுத்துவதற்கான பணிகளை மாநில அரசு தொடங்கியுள்ளது. இதழியல் கல்வி நிறுவனத்தை அமைப்பதற்கான பூா்வாங்கப் பணிகளும், அதற்கான கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கான உத்தரவும் தயாராகி வருகிறது.

ஐஏஎஸ் அதிகாரி நியமனம்: இதழியல் கல்வி நிறுவனத்தின் சிறப்புப் பணி அதிகாரியாக, தமிழ்நாடு சாலைப் பகுதி நிறுவனத்தின் திட்ட இயக்குநா் எஸ்.ஏ.ராமன் நியமிக்கப்படவுள்ளாா். அதன்பிறகு, கல்வி நிறுவனத்துக்கென முதல்வா், பேராசிரியா்கள், கெளரவ விரிவுரையாளா்கள் உள்பட பல்வேறு நியமனங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதழியல் கல்வியானது பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தனியாா் நிறுவனங்கள் சாா்பில் தமிழகம் முழுவதும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தமிழக அரசே இதழியல் கல்வி நிறுவனத்தைத் தொடங்கி நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐஐடி தேர்வு தேர்ச்சியில் தமிழ்நாடு கடைசியிலிருந்து 3-ம் இடம்! - அன்புமணி

ஐஐடிநுழைவுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு பின்தங்கியுள்ளதால் மாநில பாடத்திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்த... மேலும் பார்க்க

கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு நிபந்தனையுடன் அனுமதி!

தமிழகத்தில் உள்ள கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சியை நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கி சென்னை உயர்மன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் சென்னை உயர்மன்ற மதுரைக் கிளைக்கு உள்பட்ட 14 மாவட்டங்களி... மேலும் பார்க்க

செய்தித்தாள்களில் உணவு வழங்கக் கூடாது! - உணவகங்களுக்கு 14 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

உணவகங்களில் பின்பற்றக்கூடிய 14 வழிகாட்டு நெறிமுறைகள் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் உணவு விற்பனை செய்தாலோ அல்லது தயாரித்தாலோ உணவக உரிமையாளர... மேலும் பார்க்க

ரூ.300 கோடியில் ரோபோடிக் பாகங்கள் உற்பத்தி ஆலை: முதல்வர் திறந்து வைத்தார்!

ரூ.300 கோடி முதலீட்டில் 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக் கோட்டை சிப்காட்தொழிற்பூங்காவில் அஜைல் ரோபோட்ஸ் (Agile Robots) நிறுவனம் அமைத்துள்ள செயற்கை நு... மேலும் பார்க்க

ஜூன் 8ல் தமிழகம் வருகிறார் அமித் ஷா?

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிற ஜூன் 8 ஆம் தேதி தமிழகம் வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சிகள் தேர்தலுக்கு முந்தைய பண... மேலும் பார்க்க

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

சென்னை: பூந்தமல்லி - போரூா் இடையே 2-ஆம் கட்ட ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் இன்று நடைபெறும் என மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.பூந்தமல்லி பணிமனை முதல் போரூர் வரை 9.5 கிலோ மீட்டர் தொலை... மேலும் பார்க்க