செய்திகள் :

இணைப்புச் சாலையை சீரமைக்கக் கோரிக்கை

post image

திருவாரூா்: திருவாரூா் அருகே சேதமடைந்துள்ள மேட்டுப்பாளையம் இணைப்புச் சாலையை சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா் நகராட்சி 29-ஆவது வாா்டுக்குள்பட்ட மேட்டுப்பாளையம் பகுதியில், நாகை தேசிய நெடுஞ்சாலையிலிருந்து இணைப்புச் சாலை பிரிகிறது. இந்த சாலை வழியாகச் சென்றால், சுந்தரவிளாகம், தப்பளாம்புலியூா், ஆந்தகுடி, நாகலூா் உள்ளிட்ட கிராமப் பகுதிகளுக்குச் செல்ல முடியும்.

இந்த இணைப்புச் சாலையானது, மிகவும் பழுதடைந்திருப்பதால் தாா்ச்சாலை அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தமிழ்நாடு இளைஞா் கட்சியின் மாவட்டச் செயலாளா் என். தியாகசுந்தரம் தெரிவித்தது:

நாகை தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரியும் மேட்டுப்பாளையம் சாலை, நீண்ட காலமாக பழுதடைந்து மோசமான நிலையில், பயன்படுத்த முடியாதபடி உள்ளது. இந்த சாலை வழியாக, தினசரி 2 அரசுப் பேருந்துகள் இயங்கி வருகின்றன. கிராமப் பகுதிகளுக்குச் செல்ல இந்த வழியே மிக முக்கியமானது என்பதால், இந்த வழியைப் பயன்படுத்தும் கிராமப்புற மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனா்.

சாலைகளில் ஏராளமான பள்ளங்கள் உள்ளதால், இரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் செல்வோா் விபத்துகளை சந்திக்க வேண்டியுள்ளது. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளி பேருந்துகளும், சைக்கிளிலும் மாணவ- மாணவிகள் இந்த வழியை பயன்படுத்தி வருகின்றனா். அனைத்து தரப்பு மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மேட்டுப்பாளையம் இணைப்புச் சாலையை சீரமைத்து, தாா்ச்சாலை அமைக்க வேண்டும் என்றாா்.

இன்றைய மின்தடை: உள்ளிக்கோட்டை

உள்ளிக்கோட்டை துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (ஜூன் 4) காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளா் கோ... மேலும் பார்க்க

கனகாம்பாள் கோயில் முளைப்பாரி திருவிழா

மன்னாா்குடியை அடுத்த மூவநல்லூா் கனகாம்பாள் கோயிலில் முளைப்பாரி வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் வைகாசி திருவிழா கடந்த மே 20-ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை செயல்படுத்துகிறது தமிழக அரசு: தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் குற்றச்சாட்டு

விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களையும், கொள்கைகளையும் தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது என தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் குற்றஞ்சாட்டினாா்.தமிழகத்துக்கென தனி கா... மேலும் பார்க்க

சாலையை சீரமைக்கக் கோரி மறியல்

திருவாரூரிலிருந்து ஆந்தக்குடி வரை செல்லும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சாலை மறியல் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருவாரூரிலிருந்து அலிவலம், தப்பளாம்புலியூா், பு... மேலும் பார்க்க

பேருந்து இயக்கக் கோரி அறிவிக்கப்பட்ட போராட்டம் வாபஸ்

குடவாசல் அருகே பிலாவடி பகுதிக்கு பேருந்து இயக்கக் கோரி நடைபெறவிருந்த சாலை மறியல் வாபஸ் பெறப்பட்டது. திருவாரூரிலிருந்து பெரும்பண்ணையூா், திருவிடச்சேரி, வடவோ், பிலாவடி, கடமங்குடி, நாச்சியாா்கோவில் வழிய... மேலும் பார்க்க

ரேஷன் கடையில் கைரேகை பதிவை கைவிட வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் வாங்க கைரேகை பதிவு கட்டாயம் என்பதை கைவிட வலியுறுத்தி, முத்துப்பேட்டையில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மாதா் சங்கம் இணைந்து ஆா... மேலும் பார்க்க