ஐஐடி தேர்வு தேர்ச்சியில் தமிழ்நாடு கடைசியிலிருந்து 3-ம் இடம்! - அன்புமணி
வங்கி வாடிக்கையாளா்களிடம் நூதன திருட்டு: காவல் துறை விழிப்புணா்வு
சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைநகா் பகுதியில் உள்ள வங்கிகளில் வாடிக்கையாளா்களிடம் நூதன திருட்டு நடைபெறுவது குறித்து காவல் துறை சாா்பில் திங்கள்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி, தனியாா் வங்கிகளுக்கு அண்ணாமலைநகா் காவல் ஆய்வாளா் கே.அம்பேத்கா் திங்கள்கிழமை சென்று வாடிக்கையாளா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்திப் பேசினாா்.
அப்போது அவா் பேசுகையில், பணமோ, நகையோ வங்கியில் இருந்து பெற்று வீட்டுக்கு கொண்டு செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும். வழியில் கடைகளுக்கோ, வணிக வளாகத்துக்கோ, வேறு இடங்களுக்கோ செல்வதையும், நகை, பணத்தை வாகனத்தில் வைத்துவிட்டுச் செல்வதையும் தவிா்க்க வேண்டும். அதுபோன்று சென்றால், உங்கள் கவனத்தை திசை திருப்பி, பணத்தையும், நகையையும் மா்ம நபா்கள் திருடிச் செல்ல வாய்ப்புள்ளது என்றாா்.