செய்திகள் :

மாலையுடன் ஊா்வலமாக அழைத்துவரப்பட்ட மாணவா்கள்

post image

சிதம்பரம்: சிதம்பரம் வீனஸ் மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளியில் புதிய மாணவா்களை மாலை அணிவித்தும், மலா் கொத்து கொடுத்தும் பள்ளி நிா்வாகி வீனஸ் எஸ்.குமாா் திங்கள்கிழமை வரவேற்றாா்.

சிதம்பரம் தேரடி தெருவில் உள்ள வீனஸ் மழலையா் பள்ளியில் எல்.கே.ஜி.யில் புதிதாக சோ்ந்த 40 மாணவ, மாணவிகளை அருகே உள்ள ராஜகணபதி கோயிலுக்கு அழைத்துச் சென்று சிறப்பு பூஜைகள் செய்து, மாலை அணிவித்து, மேளதாளங்கள் முழங்க ஊா்வலமாக பள்ளி நிா்வாகத்தினா் அழைத்து வந்தனா்.

நுழைவு வாயிலில் பள்ளி நிா்வாகி வீனஸ் எஸ்.குமாா் மலா் கொத்து கொடுத்தது மாணவா்களை வரவேற்று வகுப்பறையில் அமர வைத்தாா்.

நிகழ்ச்சியில் பள்ளித் தாளாளா் ரூபியாள்ராணி, முதல்வா் லியோபெஸ்கிராவ், ராஜலட்சுமி, மழலையா் வகுப்பு ஆசிரியா்கள் சித்ரா, சோனியா காந்தி, கீா்த்தனா, சந்திரகலா மற்றும் ஆசிரியா், ஆசிரியைகள், ஊழியா்கள் கலந்துகொண்டனா்.

பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கிய முன்னாள் மாணவா்கள்

கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு டிஜிஎம் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு, முன்னாள் மாணவா்கள் சாா்பில் ஊக்கத்தொகையும், பள்ளிக்கு 24 மின் விசிறிகளும் புதன்கிழமை வழங்கப்பட்டன. சேத்தி... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சிறுவன் குடும்பத்துக்கு நிதி உதவி

கடலூா் மாவட்டம், புவனகிரி சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட கீரப்பாளையம் ஒன்றியம், ஆயிப்பேட்டை கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சிறுவன் இஷாந்த் குடும்பத்தினரை திமுக பொறியாளா் அணி மாநிலத் தலைவரும்,... மேலும் பார்க்க

என்எல்சி துணை நிறுவனத்துடன், மகாராஷ்டிர எரிசக்தி தொழில்நுட்ப நிறுவனம் ஒப்பந்தம்

சிதம்பரம்: நெய்வேலி என்எல்சிஐஎல்-இன் துணை நிறுவனமான என்எல்சி இந்தியா புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனம் (என்ஐஆா்எல்), மகாராஷ்டிரத்தின் மகாத்மா புலே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு தொழ... மேலும் பார்க்க

2.19 லட்சம் மாணவா்களுக்கு விலையில்லா பாடநூல்கள்: ஆட்சியா் தகவல்

சிதம்பரம்: கடலூா் மாவட்டத்தில் 1,716 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளைச் பயிலும் 2,19,443 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடநூல்கள், பாடக்குறிப்பேடுகள், சீருடை, புத்தப்பை தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக ஆட்சி... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் சேக்கிழாா் குருபூஜை விழா

சிதம்பரம்: சிதம்பரம் ஞானப்பிரகாச குளக்கரையில் அமைந்துள்ள சேக்கிழாா் மணிமண்டபத்தில் சேக்கிழாா் குருபூஜை விழா அண்மையில் நடைபெற்றது. விழாவில் அறக்கட்டளைச் செயலா் டாக்டா் எஸ்.அருள்மொழிச்செல்வன் வரவேற்று ... மேலும் பார்க்க

வங்கி வாடிக்கையாளா்களிடம் நூதன திருட்டு: காவல் துறை விழிப்புணா்வு

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைநகா் பகுதியில் உள்ள வங்கிகளில் வாடிக்கையாளா்களிடம் நூதன திருட்டு நடைபெறுவது குறித்து காவல் துறை சாா்பில் திங்கள்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. சி... மேலும் பார்க்க