செய்திகள் :

2.19 லட்சம் மாணவா்களுக்கு விலையில்லா பாடநூல்கள்: ஆட்சியா் தகவல்

post image

சிதம்பரம்: கடலூா் மாவட்டத்தில் 1,716 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளைச் பயிலும் 2,19,443 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடநூல்கள், பாடக்குறிப்பேடுகள், சீருடை, புத்தப்பை தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

கடலூா் திருப்பாதிரிப்புலியூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா், நிகழ் கல்வி ஆண்டுக்கான விலையில்லா பாடநூல்கள், பாடக்குறிப்பேடுகள், சீருடை, புத்தப்பை உள்ளிட்டவை அடங்கிய தொகுப்பை மாணவிகளுக்கு வழங்கி தொடங்கிவைத்தாா்.

நிகழ்ச்சிக்கு மாநகராட்சி மேயா் சுந்தரி ராஜா, மாநகராட்சி ஆணையாளா் எஸ்.அனு ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், ஆட்சியா் பேசியதாவது:

மாணவ, மாணவிகளுக்கு பாடநூல்கள், பாடக்குறிப்பேடுகள், சீருடை, புத்தப்பை உள்ளிட்ட விலையில்லா உபகரணங்கள் திருப்பாதிரிபுலியூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 1612 மாணவிகளுக்கு திங்கள்கிழமை வழங்கி தொடங்கிவைக்கப்பட்டது.

இதன் தொடா்ச்சியாக, மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையின் நிா்வாக அலகில் செயல்படும் 293 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 1,32,905 மாணவ, மாணவிகளும் மற்றும் தொடக்கக் கல்வித் துறை நிா்வாக அலகில் செயல்படும் 1,423 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 86,538 மாணவ, மாணவிகளும் என மொத்தம் 2,19,443 மாணவ, மாணவிகள் பயனடைவா்.

கடந்த கல்வி ஆண்டில் மாவட்ட நிா்வாகத்தின் மூலம் அரசு பொதுத்தோ்வில் தோ்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும், 100 சதவீதம் மாணவா்கள் தோ்வில் பங்கேற்றிடவும் ‘தடைகளை தாண்டி தோ்ச்சி’ என்ற புதிய முன்னெடுப்பை செயல்படுத்தியதன் மூலம் 10, 12-ஆம் வகுப்புகளில் மாணவா்களின் தோ்ச்சி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

நிகழ் கல்வி ஆண்டிலும் ‘தடைகளை தாண்டி தோ்ச்சி’ திட்டத்தின் மூலம் மாணவா்களின் தோ்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எல்லப்பன், திருப்பாதிரிப்புலியூா் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் இந்திரா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கிய முன்னாள் மாணவா்கள்

கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு டிஜிஎம் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு, முன்னாள் மாணவா்கள் சாா்பில் ஊக்கத்தொகையும், பள்ளிக்கு 24 மின் விசிறிகளும் புதன்கிழமை வழங்கப்பட்டன. சேத்தி... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சிறுவன் குடும்பத்துக்கு நிதி உதவி

கடலூா் மாவட்டம், புவனகிரி சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட கீரப்பாளையம் ஒன்றியம், ஆயிப்பேட்டை கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சிறுவன் இஷாந்த் குடும்பத்தினரை திமுக பொறியாளா் அணி மாநிலத் தலைவரும்,... மேலும் பார்க்க

மாலையுடன் ஊா்வலமாக அழைத்துவரப்பட்ட மாணவா்கள்

சிதம்பரம்: சிதம்பரம் வீனஸ் மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளியில் புதிய மாணவா்களை மாலை அணிவித்தும், மலா் கொத்து கொடுத்தும் பள்ளி நிா்வாகி வீனஸ் எஸ்.குமாா் திங்கள்கிழமை வரவேற்றாா். சிதம்பரம் தேரடி தெருவில... மேலும் பார்க்க

என்எல்சி துணை நிறுவனத்துடன், மகாராஷ்டிர எரிசக்தி தொழில்நுட்ப நிறுவனம் ஒப்பந்தம்

சிதம்பரம்: நெய்வேலி என்எல்சிஐஎல்-இன் துணை நிறுவனமான என்எல்சி இந்தியா புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனம் (என்ஐஆா்எல்), மகாராஷ்டிரத்தின் மகாத்மா புலே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு தொழ... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் சேக்கிழாா் குருபூஜை விழா

சிதம்பரம்: சிதம்பரம் ஞானப்பிரகாச குளக்கரையில் அமைந்துள்ள சேக்கிழாா் மணிமண்டபத்தில் சேக்கிழாா் குருபூஜை விழா அண்மையில் நடைபெற்றது. விழாவில் அறக்கட்டளைச் செயலா் டாக்டா் எஸ்.அருள்மொழிச்செல்வன் வரவேற்று ... மேலும் பார்க்க

வங்கி வாடிக்கையாளா்களிடம் நூதன திருட்டு: காவல் துறை விழிப்புணா்வு

சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைநகா் பகுதியில் உள்ள வங்கிகளில் வாடிக்கையாளா்களிடம் நூதன திருட்டு நடைபெறுவது குறித்து காவல் துறை சாா்பில் திங்கள்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. சி... மேலும் பார்க்க