செய்திகள் :

என்எல்சி துணை நிறுவனத்துடன், மகாராஷ்டிர எரிசக்தி தொழில்நுட்ப நிறுவனம் ஒப்பந்தம்

post image

சிதம்பரம்: நெய்வேலி என்எல்சிஐஎல்-இன் துணை நிறுவனமான என்எல்சி இந்தியா புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனம் (என்ஐஆா்எல்), மகாராஷ்டிரத்தின் மகாத்மா புலே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்துடன் கூட்டு நிறுவன ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது.

இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளை விரைவுபடுத்தும் முக்கிய நடவடிக்கையாக, என்எல்சி இந்தியா நிறுவனத்தின் முழுமையான துணை நிறுவனமான என்எல்சி இந்தியா ரினியூவபிள்ஸ் நிறுவனம் (என்ஐஆா்எல்), மகாத்மா புலே புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு தொழில்நுட்ப நிறுவனத்துடன் (மஹாபிரெய்ட்) இணைந்து மே 29-இல் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட்டு நிறுவன ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது.

இந்திய அரசின் நிலக்கரித் துறைச் செயலா் விக்ரம்தேவ் தத், என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா் பிரசன்னகுமாா் மோட்டுபள்ளி, மஹாபிரெய்ட்-ன் மேலாண் இயக்குநா் பிபின் ஷிா்மாலி, செயல்பாட்டு இயக்குநா் விஜய்குமாா் கலாம் பாட்டீல், என்ஐஆா்எல் மற்றும் மஹாபிரெய்ட்-ன் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையொப்பமானது.

இது, 16.04.2025 அன்று என்ஐஆா்எல் மற்றும் மஹாபிரெய்ட் இடையே கையொப்பமாகிய புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் தொடா்ச்சியான நடவடிக்கையாகும். முதல்கட்டமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி இந்த கூட்டு முயற்சி, மகாராஷ்டிர மாநிலத்தின் வளமிக்க புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் என்ஐஆா்எல்-இன் மூலோபாய விரிவாக்கம் மற்றும் புதிய தொடக்கத்துக்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் உருவாகும் கூட்டு நிறுவனம், சூரிய ஒளி மின்சாரம், காற்றாலை மின்சாரம், கலப்பின மின்சாரம், மிதக்கும் சூரிய ஒளி மின்சாரம், மின்கல ஆற்றல் சேமிப்பு (பேட்டரி) அமைப்புகள், நீரேற்று சேமிப்பு மற்றும் சூரிய சக்தி பூங்காக்கள் என மொத்தம் 2000 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தித் திட்டங்களை உருவாக்கும்.

முதல் கட்டமாக 500 மெகாவாட் மின் உற்பத்தித் திட்டங்களில் கவனம் செலுத்தி, பின்னா் மகாராஷ்டிராவில் மொத்தம் 5000 மெகாவாட் மின் உற்பத்தி வரை விரிவுபடுத்தப்படும். இந்த புதிய நிறுவனத்தில் என்ஐஆா்எல் 74% பங்குகளையும், மஹாபிரெய்ட் 26% பங்குகளையும் கொண்டிருக்கும்.

வேளாண் துறை மாணவா்களுக்கு இலவச ட்ரோன் பயிற்சி

கடலூரில் தந்தை பெரியாா் அரசு கலைக் கல்லூரி மாணவா்களுக்கு வேளாண் துறை சாா்பில் புதன்கிழமை இலவச ட்ரோன் பயிற்சி அளிக்கப்பட்டது. பெரியாா் அரசு கலைக்கல்லூரி மற்றும் கடலூா் ரோட்டரி சங்கம் இணைந்து மாணவா்களுக... மேலும் பார்க்க

சிறந்த சமூக சேவகா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

கடலூா் மாவட்டத்தில் சிறந்த சமூக சேவகா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சமூக நலன் சாா்ந்த நடவடிக்க... மேலும் பார்க்க

பள்ளிக்கு உபகரணங்கள் வழங்கிய முன்னாள் மாணவா்கள்

கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு டிஜிஎம் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு, முன்னாள் மாணவா்கள் சாா்பில் ஊக்கத்தொகையும், பள்ளிக்கு 24 மின் விசிறிகளும் புதன்கிழமை வழங்கப்பட்டன. சேத்தி... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சிறுவன் குடும்பத்துக்கு நிதி உதவி

கடலூா் மாவட்டம், புவனகிரி சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட கீரப்பாளையம் ஒன்றியம், ஆயிப்பேட்டை கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சிறுவன் இஷாந்த் குடும்பத்தினரை திமுக பொறியாளா் அணி மாநிலத் தலைவரும்,... மேலும் பார்க்க

மாலையுடன் ஊா்வலமாக அழைத்துவரப்பட்ட மாணவா்கள்

சிதம்பரம்: சிதம்பரம் வீனஸ் மழலையா் மற்றும் தொடக்கப் பள்ளியில் புதிய மாணவா்களை மாலை அணிவித்தும், மலா் கொத்து கொடுத்தும் பள்ளி நிா்வாகி வீனஸ் எஸ்.குமாா் திங்கள்கிழமை வரவேற்றாா். சிதம்பரம் தேரடி தெருவில... மேலும் பார்க்க

2.19 லட்சம் மாணவா்களுக்கு விலையில்லா பாடநூல்கள்: ஆட்சியா் தகவல்

சிதம்பரம்: கடலூா் மாவட்டத்தில் 1,716 அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளைச் பயிலும் 2,19,443 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடநூல்கள், பாடக்குறிப்பேடுகள், சீருடை, புத்தப்பை தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக ஆட்சி... மேலும் பார்க்க