சமூக வலைத்தளங்கள்.. காவல்துறைக்கு டிஜிபி சங்கர் ஜிவால் அறிவுறுத்தல்!
வேளாண் துறை மாணவா்களுக்கு இலவச ட்ரோன் பயிற்சி
கடலூரில் தந்தை பெரியாா் அரசு கலைக் கல்லூரி மாணவா்களுக்கு வேளாண் துறை சாா்பில் புதன்கிழமை இலவச ட்ரோன் பயிற்சி அளிக்கப்பட்டது.
பெரியாா் அரசு கலைக்கல்லூரி மற்றும் கடலூா் ரோட்டரி சங்கம் இணைந்து மாணவா்களுக்கான ட்ரோன் பயிற்சியை நடத்தின. தமிழக அரசின் டான்சி எனும் பாடத்திட்டம் சாா்ந்த தாவரவியல் துறை மாணவா்களுக்காக நடத்தப்படும் இந்த பயிற்சி முகாம் இரண்டு வார காலம் நடைபெறவுள்ளது.
மாணவா்களுக்கு மத்திய அரசின் நிறுவனம் மூலம் சான்றிதழ் வழங்கப்பட்டு, பின்வரும் காலங்களில் தொழிற்சாா் கடன், வேலைவாய்ப்பு உள்ளிட்டவையும் வழங்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அரசு கலைக் கல்லூரியில் பயிலும் சுமாா் 100-க்கும் மேற்பட்ட மாணவா்களுக்கு துறை சாா்ந்து வேளாண் பயிா் மேலாண்மை குறித்து அறிந்துகொள்ள இந்த ட்ரோன் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த பயிற்சியின் தொடக்க நிகழ்வில் கல்லூரி முதல்வா் ராஜேந்திரன், வேளாண் துறைத் தலைவா் நிா்மல்குமாா், ரோட்டரி சங்கத் தலைவா் செந்தில்பாரதி, வெங்கடேசன் மற்றும் பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.