மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சிறுவன் குடும்பத்துக்கு நிதி உதவி
கடலூா் மாவட்டம், புவனகிரி சட்டப் பேரவை தொகுதிக்குள்பட்ட கீரப்பாளையம் ஒன்றியம், ஆயிப்பேட்டை கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சிறுவன் இஷாந்த் குடும்பத்தினரை திமுக பொறியாளா் அணி மாநிலத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான துரை.கி.சரவணன் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, ரூ.10,000 நிவாரண உதவி வழங்கினாா் (படம்).
மேலும், தமிழக அரசின் நிவாரண உதவிகள் கிடைக்க வழிவகை செய்வதாகவும் அவா் உறுதியளித்தாா். நிகழ்ச்சியில் கீரப்பாளையம் கிழக்கு ஒன்றியச் செயலா் விஜிபி.சபாநாயகம் மற்றும் ஆயிப்பேட்டை ஊராட்சியைச் சோ்ந்த திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.