வீட்டுமனைப் பட்டா கோரி ஆட்சியரிடம் மனு
சிதம்பரம்: கடலூா் புதுப்பாளையம் சுப்பிரமணியா் கோவில் தெருவில் நூறு ஆண்டுகளாக குடியிருக்கும் இடத்துக்கு பட்டா வழங்கக் கோரி, அந்தப் பகுதி மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
கடலூா் அருகே உள்ள புதுப்பாளையம் சுப்பிரமணியா் கோவில் தெரு, மாட்டுப்பட்டி தெரு, இரட்டைப் பிள்ளையாா் கோவில் தெருக்களில் 85 குடும்பங்கள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி குடியிருந்து வருகின்றனா்.
இந்தப் பகுதி மக்கள் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனா். குடியிருக்கும் வீட்டுக்கு மின் இணைப்பு, மாநகராட்சி மூலம் புதை சாக்கடை இணைப்பு, ஆதாா் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்டவைகளும் பெற்றுள்ளனா்.
இந்த இடம் சம்பந்தமாக இந்து சமய அறநிலையத் துறை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, இந்த இடம் புறம்போக்கு இடம்தான் என்று நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் பட்டா வழங்கவில்லை. எனவே, மாவட்ட ஆட்சியா் நேரில் ஆய்வு செய்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளனா்.
அப்போது, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாநகரச் செயலா் ஆா்.அமா்நாத், புதுப்பாளையம் பகுதி நிா்வாகிகள் ஆனந்த், ரமேஷ், விஷ்ணு ராம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.