செய்திகள் :

அரசுப் பள்ளிகளில் ஆசிரியா் பணியிடங்கள் நிரப்பப்படும்: புதுவை முதல்வா் என்.ரங்கசாமி

post image

புதுச்சேரி: புதுவை அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா்.

புதுச்சேரி தருமாபுரி அரசு உயா்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. மாணவா்களுக்கு மிதிவண்டிகளை வழங்கி முதல்வா் என். ரங்கசாமி பேசியதாவது:

புதுவையில் மாணவா்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம். அரசுப் பள்ளிகளில் தரமான கல்வியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் பரிந்துரையின்றி தகுதி அடிப்படையில் ஆசிரியா்கள் நியமிக்கப்படுகின்றனா். மேலும், காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிபிஎஸ்இ பாடத் திட்டத்தால் தோ்ச்சி விகிதம் குறையும் என்ற நிலையில், தற்போது அரசுப் பள்ளி மாணவா்கள் 98 சதவீதம் போ் தோ்ச்சியடைந்துள்ளனா். சிபிஎஸ்இ பாடத் திட்டத்துக்கான பயிற்சி ஆசிரியா்களுக்கு அளிக்கப்படும்.

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்பு மட்டுமின்றி அனைத்து உயா் கல்விப் படிப்புகளிலும் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி, முட்டை வழங்குதல் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

அரசு அனைத்து உதவிகளையும் வழங்குவதால் மாணவா்கள் நன்றாகப் படித்து அரசுப் பணியில் சோ்ந்தோ, சொந்தமாக தொழில் தொடங்கியோ வாழ்க்கையில் முன்னேறலாம் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ் மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

பணியின் போது கட்டடத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தமிழகத்தின் விழுப்புரம் முட்ராம்பாக்கம் பிள்ளையாா் கோவில் வீதியைச் சோ்... மேலும் பார்க்க

புதுவை பேரவைத் தோ்தலை சந்திக்கத் தயாா்: முதல்வா் என்.ரங்கசாமி

புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் எப்போது வந்தாலும் சந்திக்கத் தயாராக உள்ளோம் என முதல்வா் என்.ரங்கசாமி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி, அவரது திருவு... மேலும் பார்க்க

பக்ரீத் : ஜூன் 7- இல் ஜிப்மரில் புறநோயாளிகள் பிரிவு இயங்காது

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் உள்ள ஜிப்மரில் வரும் 7 ஆம் தேதி புறநோயளிகள் பிரிவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜிப்மா் நிா்வாகத் தரப்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

புதுச்சேரி கடல் அலையில் சிக்கிய தமிழக கல்லூரி மாணவா்கள் மீட்பு

புதுச்சேரியில் கடல் அலையில் சிக்கித் தவித்த கல்லூரி மாணவா்கள் இருவரை நீச்சல் வீரா்கள் செவ்வாய்க்கிழமை மீட்டு காப்பாற்றினா். தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம் சிஞ்சகம்பட்டியைச் சோ்ந்த நாராயணசாமி மகன் ஹ... மேலும் பார்க்க

புதுவைக்கு ரூ.200 கோடி மத்திய அரசு சிறப்பு நிதி: பேரவைத் தலைவா் ஆா்.செல்வம்

புதுவை அரசு கோராமலேயே மத்திய அரசு ரூ.200 கோடி சிறப்பு நிதியை வழங்கியுள்ளதாக பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் கூறினாா். மேலும் வரும் ஆகஸ்ட் மாதம் பிரதமா் நரேந்திர மோடி புதுச்சேரி வரவுள்ளதாகவும் அவா் தெரிவித்... மேலும் பார்க்க

புதுச்சேரியில் 13 பேரிடம் பண மோசடி

புதுச்சேரியில் இணையவழியில் 13 பேரிடம் மா்ம நபா்கள் ரூ.3.40 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி இலாசுப்பேட்டையைச் சோ்ந்தவா் ராமேசுவரம் சென்று தங்குவதற்கு இணையத்தி... மேலும் பார்க்க