செய்திகள் :

பொள்ளாச்சி: கொலை வழக்கில் கைதானவர்களிடம் 18 பவுன் நகை, 1.50 லட்சம் பணம் கையாடல்- உதவி ஆய்வாளர் கைது

post image

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ரத்தின சபாபதிபுரம் பகுதியில் ஒரு மனநல காப்பகம் செயல்பட்டு வந்தது. சூலூர் அருகே உள்ள கரவளி மாதப்பூர் பகுதியைச் சேர்ந்த வருண்காந்த் என்ற ஆட்டிசம் பாதிக்கப்பட்ட இளைஞர் இங்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை காப்பக உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் இணைந்து கடந்த மே 12-ம் தேதி படுகொலை செய்தனர்.

வருண்காந்த்

இதுதொடர்பாக காப்பகத்தின் உரிமையாளர்கள் கவிதா, ஷாஜி, கிரி மற்றும் காப்பக நிர்வாகிகள் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவங்கள் வெளியாகி வருகின்றன. வருண் கொலைக்கு பிறகு கவிதா, அவரின் கணவர் லட்சுமணன், ஷாஜி, கிரி ஆகியோர் தலைமறைவாகியிருந்தனர். அவர்களை பிடிக்க காவல்துறையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருந்தன.

நகை, பணம்

அதில் மகாலிங்கபுரம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் டீம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வைத்து கவிதா, லட்சுமணன், ஷாஜி உள்ளிட்டோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த நகை மற்றும் பணத்தை போலீஸார் மீட்டனர்.

பொதுவாக குற்ற வழக்குகளில் கைது செய்யப்படுவோரிடம் இருந்து மீட்கப்படும் பணம் மற்றும் நகைகள் அரசின் கருவூலத்தில் பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும். கைது செய்யப்பட்டவர்கள் விடுதலையான பிறகு அவை அவர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்படும்.

நவநீதகிருஷ்ணன்

ஆனால் நவநீதிகிருஷ்ணன் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 18 சவரன் தங்கநகை மற்றும் ரூ.1.50 பணத்தை உயரதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்து செல்லாமல், அதை கையாடல் செய்ததாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் காவல்துறையில் புகாரளித்துள்ளனர். அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரித்ததில், அது உண்மை என்று தெரியவந்தது. இதையடுத்து காவல்துறையினர் நவநீதகிருஷ்ணன் மீது வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மகாராஜா

மேலும் இந்த வழக்கின் தனிப்படையில் இருந்த மற்றொரு காவல் உதவி ஆய்வாளர் மகாராஜா, நவநீதகிருஷ்ணனிடம் இருந்து ரூ.50,000 பெற்றது தெரியவந்தது. மகாலிங்கம் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஜாவை பணியிடை நீக்கம் செய்து கோவை சரக டிஐஜி சசிமோகன் உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி: ஒருமணி நேரத்தில் நடந்த இரட்டைக்கொலை; முன் விரோதம் காரணமா? பழிக்குப்பழியா?

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி - கடலையூர் சாலையில் உள்ள டாஸ்மாக் அருகே நேற்று இரவு நின்று கொண்டிருந்த வள்ளுவர்நகரைச் சேர்ந்த பிரகதீஸ் என்பவரை மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டி செய்து விட்டு ... மேலும் பார்க்க

Tiger: பைக்காரவை தொடர்ந்து முதுமலையில் இறந்து கிடந்த ஆண் புலி... தொடரும் சோகம்!

வங்கப் புலிகளின் வாழிடத்தில் உலக அளவில் மிக முக்கிய பகுதியாக நீலகிரி உயர்ச்சூழல் மண்டலம் விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் முதுமலை& சத்தியமங்கலம் , கேரளாவின் முத்தங்கா, கர்நாடகாவின் பந்திப்பூர் ஆகிய... மேலும் பார்க்க

தூத்துக்குடி: கார் மோதி இளைஞர் பலி; வழக்கிலிருந்து தப்பிக்க காரை விற்ற நால்வர் சிக்கியது எப்படி?

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள சிலோன் காலனியைச் சேர்ந்தவர் ரவிராஜ்குமார். இவர், சொந்தமாக போர்வெல் லாரி வைத்துள்ளார். கடந்த 22-ம் தேதி இரவு தனது பைக்கில் தூத்துக்குடியில் இருந்து அவரது... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: போர்க்கப்பல்களை உளவு பார்த்த மும்பை பொறியாளர் கைது; விசாரணையில் வெளியான பகீர் தகவல்

மும்பை டாக்யார்டு கப்பல் கட்டும் தளத்தில் இந்தியக் கடற்படைக்குத் தேவையான போர்க்கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் தனியார் நிறுவனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அது போன்ற ஒரு தனியார் நிறுவனத்தில் பணி... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: முன்னாள் காதலியுடனான உறவைத் தட்டிக்கேட்ட மனைவி; விஷ ஊசி போட்டுக் கொன்ற ராணுவ வீரர்

மகாராஷ்டிரா மாநிலம் துலே அருகில் உள்ள வால்வாடி என்ற இடத்தைச் சேர்ந்தவர் கபில் பாகுல். இவரது மனைவி பூஜா(38). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கபில் பாகுல் ராணுவத்தில் கிளார்க்காக இருக்கிறார... மேலும் பார்க்க

சென்னை: "உன் காதலியை மறந்துவிடு" - சினிமா உதவி இயக்குநரைக் கடத்திய கும்பல்; தட்டித் தூக்கிய போலீஸ்

சென்னை அரும்பாக்கம் கோலபெருமாள்பள்ளி தெருவில் வசித்து வருபவர் சினிமா இயக்குநர் சுசீந்திரன். இவரிடம் உதவி இயக்குநராக ராஜகுமரன் என்பவர் பணியாற்றி வருகிறார்.இவரைக் கடந்த 29.5.2025-ம் தேதி மதியம் முதல் கா... மேலும் பார்க்க