செய்திகள் :

தூத்துக்குடி: ஒருமணி நேரத்தில் நடந்த இரட்டைக்கொலை; முன் விரோதம் காரணமா? பழிக்குப்பழியா?

post image

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி - கடலையூர் சாலையில் உள்ள டாஸ்மாக் அருகே நேற்று இரவு நின்று  கொண்டிருந்த வள்ளுவர்நகரைச் சேர்ந்த   பிரகதீஸ் என்பவரை மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டி செய்து விட்டு தப்பி ஓடினர். இதில் அவர் உயிரிழந்தார். இந்த நிலையில் இந்த கொலைச் சம்பவம் நடைபெற்ற ஒரு மணி நேரத்தில் புதுக்கிராமம் செண்பகாநகரில் வீட்டிற்குள் புகுந்து கஸ்தூரி என்பவரை மர்ம கும்பல் ஒன்று வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடியது. 

பிரகதீஸ் - கஸ்தூரி

இதைத்தடுக்க வந்த செண்பகராஜ் என்பவருக்கு  கையில் வெட்டு விழுந்தது. கொலை செய்யப்பட்ட இருவரது சடலங்களை  கிழக்கு காவல் நிலைய போலீஸார் கைப்பற்றி  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இரு கொலை சம்பவம் குறித்த   தூத்துக்குடி மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் மற்றும் கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் வள்ளுவர்நகர் டாஸ்மாக் கடை வாசலில் வைத்து கொலை செய்யப்பட்ட பிரகதீஸ்வரனுக்கும்,  செண்பகா நகரில் கொலை செய்யப்பட்ட கஸ்தூரியின் மகன் சதீஷ் மாதவனுக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார் சி.எஸ்.ஆர் ரசீது மட்டும் போட்டு முடித்துள்ளனர் மேற்கொண்டு நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளவில்லை.

சிகிச்சை பெற்று வரும் செண்பகராஜ்

இந்த நிலையில், இந்த கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது. இரண்டு கொலை சம்பவங்கள் தொடர்பாக கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து, ஐந்து தனிப் படைகள் அமைத்து  குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். பதிலுக்கு பதில் கொலை சம்பவம் நடைபெற்றதா என்ற கோணத்திலும்  போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்த நடந்த இரண்டு கொலைச் சம்பவங்கள் கோவில்பட்டியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை: கடத்திவரப்பட்ட 100 கிலோ கஞ்சா மூட்டைகள் - கேரள இளைஞர்கள் 2 பேர் கைது

வெளிமாநிலங்களில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டத்துக்குள் கஞ்சா போன்ற போதைப்பொருள்கள் கடத்திவரப்படுவதாக அம்மாவட்ட போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக, போதைப்பொருள் கடத்தல்காரர்களை கையும் களவுமாக... மேலும் பார்க்க

Pakistan: பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம்; 200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்... என்ன நடந்தது?

பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது கராச்சியிலுள்ள சிறையிலிருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியுள்ளனர்.பாகிஸ்தான் கராச்சி நகரத்துக்கு அருகில் நேற்று (ஜூன் 2) இரவு நிலநடுக்கம் ஏற்பட்டி... மேலும் பார்க்க

வாணியம்பாடி: பல் சிகிச்சை; தொற்றுக்குள்ளாகி 8 பேர் மரணம் - சர்ச்சை கிளினிக்கிற்குப் பூட்டு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், `வி.டி.எஸ் - அறிவு பல் மருத்துவமனை’ என்கிற பெயரில், தனியார் கிளினிக் செயல்பட்டுவந்தது. இங்கு வாணியம்பாடி நியூடவுன் பகுதியைச் சேர்ந்த இந்திராணி (வயது 53) என்பவர்... மேலும் பார்க்க

சிவகங்கை: ஆடு கோழி திருட வந்ததாகச் சந்தேகம்; அடித்துக் கொல்லப்பட்ட இளைஞர்கள்!

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே உள்ள அழகமாநகரி கிராமத்தில் நேற்று நள்ளிரவில் ஆடு, கோழிகளை திருட வந்ததாக அப்பகுதியினர் தாக்கியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்ப... மேலும் பார்க்க

``என் மகனை அடித்தால், நானும் உன் குழந்தைகளை அடிப்பேன்..'' - குழந்தைகளை அடித்து உதைத்த லிவ் இன் ஜோடி

கணவன் மனைவி இடையே சண்டை வந்தால் முதலில் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான்.மும்பை மலாடு பகுதியில் வசித்து வரும் ஷீலா, தனது கணவர் இறந்த பிறகு சஞ்சய் என்பவருடன் 2020-ம் ஆண்டில் இருந்து லிவ் இன் முறையில் வாழ... மேலும் பார்க்க

சென்னை: காதலியைக் கொன்ற காதலன் தற்கொலை; கணவன் மனைவி எனச் சொல்லித் தங்கியவர்களுக்கு என்ன நடந்தது?

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ் (19). இவர் அரசுக் கல்லூரி ஒன்றில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அபிநயா (19). இவரும் ... மேலும் பார்க்க