செய்திகள் :

``என் மகனை அடித்தால், நானும் உன் குழந்தைகளை அடிப்பேன்..'' - குழந்தைகளை அடித்து உதைத்த லிவ் இன் ஜோடி

post image

கணவன் மனைவி இடையே சண்டை வந்தால் முதலில் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான்.

மும்பை மலாடு பகுதியில் வசித்து வரும் ஷீலா, தனது கணவர் இறந்த பிறகு சஞ்சய் என்பவருடன் 2020-ம் ஆண்டில் இருந்து லிவ் இன் முறையில் வாழ்ந்து வந்தார். ஷீலா தனது முதல் திருமணத்தில் பிறந்த மகனை தாயார் வீட்டில் விட்டிருந்தார்.

ஷீலா, சஞ்சயுடன் வாழ்ந்ததில் இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொண்டார். இந்நிலையில், ஷீலா தனது மூத்த மகனை தனது தாயார் வீட்டில் இருந்து அழைத்து வந்து தன்னுடன் தங்க வைத்துக்கொண்டார்.

இதனால் ஷீலா - சஞ்சய் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. ஷீலாவின் மூத்த மகனை சஞ்சய் அடிக்கடி அடித்து உதைத்து வந்தார்.

ஷீலாவின் தாயாரும், அவரது சகோதரியும் ஒரு முறை ஷீலாவின் வீட்டிற்கு சென்று இருந்தனர். அப்போது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் ஷீலாவின் தாயாரிடம் மூன்று குழந்தைகளையும் இரண்டு பேரும் அடித்து உதைத்து சித்ரவதை செய்வதை கூறியதோடு, அந்த வீடியோ காட்சியையும் காண்பித்தனர்.

இதையடுத்து ஷீலாவின் தாயார், இவர்களை தனது வீட்டிற்கு அருகில் வசிக்க ஏற்பாடு செய்து கொடுத்தார். இதனால் ஷீலாவின் தாயார் அடிக்கடி அங்கு சென்று பார்த்து வந்தார்.

ஷீலாவின் லிவ் இன் பார்ட்னர் சஞ்சய் அடிக்கடி போதைப்பொருள் பயன்படுத்துவதை தெரிந்து கொண்டார். அதோடு போதைப்பொருளை பயன்படுத்திவிட்டு ஷீலாவின் மூத்த மகனை அடித்து உதைப்பதை வழக்கமாக கொண்டிருந்தது தெரிய வந்தது. சஞ்சய் அவ்வாறு அடித்து உதைக்கும்போது ஷீலாவும் தனது பங்கிற்கு சஞ்சய் மூலம் பிறந்த இரண்டு குழந்தைகளையும் அடித்து உதைப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இருவரும் மாறி மாறி குழந்தைகளை அடித்து உதைத்து வந்தனர்.

குழந்தைகளை துன்புறுத்தல்

இதையடுத்து ஷீலாவின் தாயார் இது குறித்து மால்வானி போலீஸில் புகார் செய்தார். அவர் தனது புகாரில் மூன்று குழந்தைகளும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அதோடு ஷீலாவின் வீட்டிற்கு சென்றபோது குழந்தைகள் துன்புறுத்தப்படுவதை தெரிந்துகொண்டதாகவும், தனது மகளும், அவரது பார்ட்னரும் திருமணம் செய்து கொண்டார்களா என்று தெரியவில்லை என்றும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். ஷீலா மற்றும் அவரின் லிவ் இன் பார்ட்னர் மீது கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரும் விசாரணைக்கு ஆஜராக போலீஸார் உத்தரவிட்டுள்ளனர். அதோடு மூன்று குழந்தைகளையும் போலீஸார் மீட்டு தொண்டு நிறுவனத்தின் பாதுகாப்பில் தங்க வைத்துள்ளனர்.

'மதுபோதையில் ஏற்பட்ட தகராறு; இளைஞரை வெட்டி குளத்துக்குள் தள்ளிய கும்பல்!' - நடந்தது என்ன?

புதுக்கோட்டை, போஸ் நகர், எட்டாம் வீதியை சேர்ந்த தினேஷ்குமார் (வயது: 23) என்ற இளைஞருக்கும், காந்திநகர் இரண்டாம் வீதி பகுதியைச் சேர்ந்த முகிலன் என்பவருக்கும் இடையே மது போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்... மேலும் பார்க்க

திருமணம் மீறிய உறவு; மனைவியின் நண்பரை அடித்துக் கொலைசெய்த பலகாரக் கடை தொழிலாளி - நடந்தது என்ன?

கரூர் மாவட்டம், க.பரமத்தி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது: 41). இவர், கரூரில் உள்ள ஒரு பலகாரக் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அம்சா (வயது: 35). அதேபோல், மது... மேலும் பார்க்க

`அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி'- எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர் மருமகன் உள்ளிட்டோர் மீது புகார்

சென்னை வெட்டுவாங்கேணி, மகாலட்சுமி தெருவைச் சேர்ந்தவர் மகாராஜா (38). இவர் கடந்த 2-ம் தேதி சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, ``நான் மேற்கண்ட முகவரியில் கடந்த ... மேலும் பார்க்க

ரயில் படிக்கட்டில் நின்று ரீல்ஸ் வெளியிட்ட பெண்; கைதுசெய்து எச்சரித்த ரயில்வே போலீஸ்- நடந்தது என்ன?

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த இளம் பெண் ஷகீலா பானு(30). இவர் ரீல்ஸ் போடுவதன் மூலம் இன்ஸ்டாவில் பிரபலம். இவர் பெங்களூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தபோது ஓடும்... மேலும் பார்க்க

கரூர்: 'கனடாவில் உடனே வேலை' - விவசாயியிடம் ரூ. 5.70 லட்சம் ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

கரூர் மாவட்டம், புகளூர் நடுநானப்பரப்பு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பாலசுப்பிரமணியன்(வயது 60). இவரது மகன் மனோஜ் பிரபாகர். இவர், பி.எஸ்.சி வேளாண் படித்து முடித்துவிட்டு வேலை இல்லாமல் வீட்டிலிருந்து வந்... மேலும் பார்க்க

``ISI தொடர்பு; பாகிஸ்தானுக்கு உளவு..'' - ஜோதி மல்ஹோத்ராவுக்கு நெருக்கமான யூடியூபர் பஞ்சாப்பில் கைது

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக சமீப காலமாக ஹரியானா, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் 12-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில் போர்க்கப்பல்களை ... மேலும் பார்க்க