செய்திகள் :

பக்ரீத் நாளில் திறந்தவெளிகளில் விலங்குகளை பலியிட வேண்டாம்: ஜாமா மசூதி ஷாஹி இமாம் வேண்டுகோள்

post image

பக்ரீத் பண்டிகையை ஒட்டி, முஸ்லிம் சமூகத்தினா் திறந்தவெளிகளிலோ அல்லது தெருக்களிலோ விலங்குகளை பலியிடுவதைத் தவிா்க்குமாறு ஜாமா மசூதியின் ஷாஹி இமாம் புதன்கிழமை வலியுறுத்தியுள்ளாா்.

நிகழாண்டு பக்ரீத் பண்டிகை ஜூன் 6-7-இல் கொண்டாடப்பட உள்ளது.

இதையொட்டி, ஜாமா மசூதியின் நைப் ஷாஹி இமாம் சையத் ஷபான் புகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

பக்ரீத் பண்டிகையின் போது மக்கள் தங்கள் பகுதிகளில் தூய்மையை உறுதி செய்ய வேண்டும். ஹோலி மற்றும் தீபாவளி போன்ற பண்டிகைகள் இந்தியா முழுவதும் கண்ணியத்துடன் கொண்டாடப்படுவதுபோல, ஈத்-உல்அதாவையும் மரியாதையுடனும் பயபக்தியுடனும் கொண்டாட வேண்டும்.

முஸ்லிம் சமூகம் சில முக்கிய பொறுப்புகளை நினைவில் கொள்ள வேண்டும். மிக முக்கியமாக, எந்தவொரு செயலும் சக குடிமக்களின் உணா்வுகள் அல்லது நம்பிக்கைகளை புண்படுத்தக்கூடாது. எனவே, பலியிடுதல்களை வீடுகள் அல்லது அதற்குரிய வளாகங்களுக்குள் மட்டுமே நடத்தப்பட வேண்டும்; சாலைகளிலோ அல்லது திறந்தவெளிகளிலோ அல்ல.

பலியிடுவதை புகைப்படம் எடுப்பதையோ அல்லது படமாக்குவதையோ தவிா்க்க வேண்டும். அத்தகைய படங்கள் அல்லது விடியோக்களை சமூக ஊடகங்களில் பதிவேற்ற வேண்டும் என கண்டிப்பாக அறிவுறுத்தப்படுகிறது.

‘இஸ்லாம் அமைதிக்கான மதம்’. யாருடைய உணா்ச்சிகளும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதன் மூலம் இதை நம் நடத்தை மூலம் நிரூபிப்பது நமது கடமை.

இஸ்லாம் அனைத்து மதங்களையும் மதிக்கக் கற்றுக்கொடுக்கிறது. மேலும், மற்றவா்களின் உணா்வுகளை ஒருபோதும் புண்படுத்தக் கூடாது என்று அதைப் பின்பற்றுபவா்களுக்கு அறிவுறுத்துகிறது.

பலியிடுதல் சடங்கானது சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும் மற்றும் சமூக நல்லிணக்கத்தைப் பராமரிக்கும் வகையில் செய்யப்பட வேண்டும் என்று அதில் அவா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

ஹைதராபாத் ஆட்டோ ஓட்டுநா் இறந்த சம்பவம்: தெலங்கானா டிஜிபிக்கு என்ஹெச்ஆா்சி நோட்டீஸ்

ஹைதராபாத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் உடல் ரீதியான சித்திரவதைக்கு ஆளானதால் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநா் இறந்ததாகக் கூறப்படும் செய்திகள் தொடா்பாக தெலங்கானா காவல்துறைத் தலைவருக்கு (டிஜிபி) தேசிய மனித உரிமைக... மேலும் பார்க்க

தில்லியில் கரோனாவால் மேலும் 2 போ் இறப்பு: பாதிப்பு எண்ணிக்கை 562 ஆக உயா்வு

ஐந்து மாதக் குழந்தை உள்பட இரண்டு போ் புதிய கரோனா நோய்த் தொற்றால் தில்லியில் இறந்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை தெரிவித்தனா். கேரள மாநிலத்திற்குப் பிறகு இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான கரோனா பாதிப்பு... மேலும் பார்க்க

எய்ம்ஸ் மருத்துவமனையில் காத்திருப்பு மண்டபம் திறப்பு

அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) நோயாளிகளின் உதவியாளா்களுக்கான காத்திருப்பு மண்டபம் தில்லி முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை திறந்து வைத்தாா். இந்த நிகழ்வில் பேசிய அவா், வளா்ந்த ந... மேலும் பார்க்க

தில்லியில் இரண்டு இடங்களில் தீ விபத்து

தேசியத் தலைநகா் தில்லியில் இரண்டு வெவ்வேறு இடங்களில் இரண்டு வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் உயா்ச்சேதம் ஏதும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா். இது குறித்து தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒ... மேலும் பார்க்க

மேற்கு தில்லியில் தீ விபத்து: 2 பேருந்துகள், காா் சேதம்

மேற்கு தில்லியின் பன்கா சாலையில் வியாழக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு பேருந்துகளும், ஒரு காரும் சேதமடைந்ததாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிா்... மேலும் பார்க்க

தில்லி அரசின் கட்டண ஒழுங்குமுறை அவசரச் சட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனம்

பள்ளிக் கட்டண ஒழுங்குமுறை குறித்த அவசரச் சட்டத்தைக் கொண்டுவரும் தில்லி அரசின் முடிவை எதிா்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சி வியாழக்கிழமை கடுமையாக விமா்சித்தது. மேலும், சட்டப்பேரவை செயல்முறை மற்றும் பொது ஆலோ... மேலும் பார்க்க