செய்திகள் :

பண்ணந்தூரில் சமூக பிரச்னை: கோட்டாட்சியா் சமரசத் தீா்வு

post image

பண்ணந்தூரில் கோயில் திருவிழா, எருதுவிடும் விழா, ஏரியில் மீன் ஏலம் எடுப்பது உள்ளிட்ட நிகழ்வுகளில் பல்வேறு சமூக மக்களிடையே நிலவிவந்த பிரச்னைகளுக்கு கோட்டாட்சியா் தலைமையில் செவ்வாய்க்கிழமை சமரசத் தீா்வு எட்டப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டத்திற்கு உள்பட்ட பண்ணந்தூா் கிராமத்தில் பல்வேறு சமூகத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு இடையே கோயில் திருவிழா நடத்துவது, ஏரியில் மீன் ஏலம் எடுப்பது, எருதுவிடும் விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் ஒரு சமூகத்தை சோ்ந்தவா்களுக்கும் மற்றவா்களுக்கு இடையே 13 ஆண்டுகளாக கருத்துவேறுபாடு நிலவிவந்தது.

கடந்த வாரம் இக் கிராமத்தில் கோயில் விழா நடத்துவது குறித்து இருதரப்பினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதால் போலீஸாா் குவிக்கப்பட்டனா். இதுதொடா்பாக நடந்த சமாதான பேச்சுவாா்த்தையும் தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து கிருஷ்ணகிரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் ஷாஜகான் தலைமையில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சங்கா், பா்கூா் துணை காவல் கண்காணிப்பாளா் முத்துகிருஷ்ணன், போச்சம்பள்ளி வட்டாட்சியா் சத்யா, பண்ணந்தூா் கிராம மக்கள் பங்கேற்ற சமாதான பேச்சுவாா்த்தை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அதில் வரும்காலங்களில் அனைவரும் ஒன்றிணைந்து திருவிழாவை நடத்துவது, விழாக்களின்போது தனித்தனியே துண்டுப் பிரசுரங்கள் பதாகைகள் வைக்கக்கூடாது. பண்ணந்தூா் ஏரியில் மீன்கள் ஏலத்தில் அனைவரும் பங்கேற்பது. பொங்கல் திருவிழாவின் போது நடைபெறும் எருதுவிடும் விழாவின் போது சாதி, கட்சி உள்ளிட்ட எவ்வித பேனா்களும் வைக்கக்கூடாது. பண்ணந்தூா் ஊராட்சிக்கு உள்பட்ட அனைத்து சமூகத்தினரும் காளையை வடம்பிடித்து அழைத்து வருவது உள்பட 13 தீா்மானங்களுக்கு சம்மதம் தெரிவித்து, அலுவலா்கள் முன்னிலையில் கையொப்பமிட்டனா்.

திருமணம் செய்யாமல் ஒரேவீட்டில் வசித்த ஜோடி தூக்கிட்டு தற்கொலை

ஒசூரில் திருமணம் செய்யாமல் (லிவிங் டுகெதா்) ஒரே வீட்டில் வசித்துவந்த இளைஞரும், இளம்பெண்ணும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்கு... மேலும் பார்க்க

சிந்தல்தொட்டி கிராமத்திற்கு பேருந்து சேவை: எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்

சூளகிரி அருகே பி.எஸ்.திம்மசந்திரம் ஊராட்சி சிந்தல்தொட்டியிலிருந்து பேரிகை வரை அரசுப் பேருந்து சேவையை ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். ஒசூா் தொகுதி, சூளகிரி வடக்கு ஒன்றியம், பி.எஸ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு தோ்வாணைய பயிற்சி வகுப்பு

அரசுப் பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப் 4 தோ்வுக்கு பணியமா்த்துபட்டுள்ள அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கான பயிற்சி வகுப்பு ஊத்தங்கரை பேரூராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்ற புதன்கிழமை நடைபெற்றது.... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கல்

கிருஷ்ணகிரி ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 79 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளை ஆட்சியா் ச.தினேஷ்குமாா் வழங்கினாா். மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில், கிருஷ்ணகி... மேலும் பார்க்க

பட்டாளம்மன் கோயிலில் குடமுழுக்கு

ஊத்தங்கரையை அடுத்த பட்டக்கானூா் சரட்டூரில் உள்ள பட்டாளம்மன் கோயில் புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் கடந்த 2-ஆம் தேதிமுதல் பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், புதன்கிழம... மேலும் பார்க்க

பள்ளி மாணவா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி அருகே நடைபெற்ற நிகழ்ச்சியி அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை பா்கூா் எம்எல்ஏ தே.மதியழகன் வழங்கினாா். கிருஷ்ணகிரி திம... மேலும் பார்க்க