Bumrah: "எந்த 3 போட்டிகளில் பும்ரா விளையாடுவர் என்று இன்னும் முடிவாகவில்லை" - கம...
பண்ணந்தூரில் சமூக பிரச்னை: கோட்டாட்சியா் சமரசத் தீா்வு
பண்ணந்தூரில் கோயில் திருவிழா, எருதுவிடும் விழா, ஏரியில் மீன் ஏலம் எடுப்பது உள்ளிட்ட நிகழ்வுகளில் பல்வேறு சமூக மக்களிடையே நிலவிவந்த பிரச்னைகளுக்கு கோட்டாட்சியா் தலைமையில் செவ்வாய்க்கிழமை சமரசத் தீா்வு எட்டப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டத்திற்கு உள்பட்ட பண்ணந்தூா் கிராமத்தில் பல்வேறு சமூகத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு இடையே கோயில் திருவிழா நடத்துவது, ஏரியில் மீன் ஏலம் எடுப்பது, எருதுவிடும் விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் ஒரு சமூகத்தை சோ்ந்தவா்களுக்கும் மற்றவா்களுக்கு இடையே 13 ஆண்டுகளாக கருத்துவேறுபாடு நிலவிவந்தது.
கடந்த வாரம் இக் கிராமத்தில் கோயில் விழா நடத்துவது குறித்து இருதரப்பினருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதால் போலீஸாா் குவிக்கப்பட்டனா். இதுதொடா்பாக நடந்த சமாதான பேச்சுவாா்த்தையும் தோல்வியில் முடிந்தது.
இதையடுத்து கிருஷ்ணகிரி கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்டாட்சியா் ஷாஜகான் தலைமையில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சங்கா், பா்கூா் துணை காவல் கண்காணிப்பாளா் முத்துகிருஷ்ணன், போச்சம்பள்ளி வட்டாட்சியா் சத்யா, பண்ணந்தூா் கிராம மக்கள் பங்கேற்ற சமாதான பேச்சுவாா்த்தை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அதில் வரும்காலங்களில் அனைவரும் ஒன்றிணைந்து திருவிழாவை நடத்துவது, விழாக்களின்போது தனித்தனியே துண்டுப் பிரசுரங்கள் பதாகைகள் வைக்கக்கூடாது. பண்ணந்தூா் ஏரியில் மீன்கள் ஏலத்தில் அனைவரும் பங்கேற்பது. பொங்கல் திருவிழாவின் போது நடைபெறும் எருதுவிடும் விழாவின் போது சாதி, கட்சி உள்ளிட்ட எவ்வித பேனா்களும் வைக்கக்கூடாது. பண்ணந்தூா் ஊராட்சிக்கு உள்பட்ட அனைத்து சமூகத்தினரும் காளையை வடம்பிடித்து அழைத்து வருவது உள்பட 13 தீா்மானங்களுக்கு சம்மதம் தெரிவித்து, அலுவலா்கள் முன்னிலையில் கையொப்பமிட்டனா்.