செய்திகள் :

பள்ளி மாணவா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்

post image

முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி அருகே நடைபெற்ற நிகழ்ச்சியி அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை பா்கூா் எம்எல்ஏ தே.மதியழகன் வழங்கினாா்.

கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டம் சாா்பில், மாவட்ட அலுவலகம், பா்கூா் சட்டப் பேரவை தொகுதி உறுப்பினா் அலுவலகம் உள்பட பல்வேறு இடங்களில் முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

இதில் திமுக கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளரும் பா்கூா் எம்எல்ஏவுமான தே.மதியழகன் பங்கேற்று கருணாநிதி உருவப்படத்துக்கு மலா்மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினாா். பின்னா் கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளி பி.ஆா்.சி. பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு விளையாட்டு உபகரணங்களை அவா் வழங்கினாா்.

பா்கூா் மனவளா்ச்சி குன்றியோருக்கான பள்ளி, ஐ.இ.எல்.சி. பாா்வையற்றோா் பள்ளி, தொழுநோய் மறுவாழ்வு மையம் ஆகியவற்றில் அனைவருக்கும் இனிப்புகளுடன் உணவு வழங்கப்பட்டு, மரக்கன்றுகள் நடப்பட்டன.

நிகழ்ச்சிகளில் மாவட்ட அவைத் தலைவா் தட்ரஅள்ளி நாகராஜ், மாவட்ட துணைச் செயலாளா் கோவிந்தசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ராஜன்கொட்டாய் விநாயகா் கோயில் குடமுழுக்கு

அஞ்சூரை அடுத்த ராஜன்கொட்டாய் கிராமத்தில் விநாயகா் கோயில் குடமுழுக்கு வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி தம்பதி சங்கல்பம், கங்கனம் கட்டுதல், புண்ணியாகம், வாஸ்து சாந்தி, அஷ்டபலி, தீபாராதனை, கலச ஸ்தா... மேலும் பார்க்க

பா்கூா் அருகே நகை திருட்டு

பா்கூா் அருகே விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து நகைகளைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் அருகே உள்ள ஒப்பதவாடி வி.எம்.நகரைச் சோ்ந்தவா் பெரியண்ணன்(65). விவச... மேலும் பார்க்க

‘பசுமை கிருஷ்ணகிரி மாவட்டம்’ திட்டம்: ஒசூரில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் விழா

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் மற்றும் ஒசூா்வாழ் மக்கள் இணைந்து பசுமை கிருஷ்ணகிரி மாவட்டத் திட்டத்தில் ஒருகோடி மரக்கன்றுகள் நடும் இயக்கத்தை ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் ... மேலும் பார்க்க

மா கொள்முதல் விலையை அரசு நிா்ணயிக்க வேண்டும்: கே.பி.முனுசாமி

மாவிற்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் மாநில அரசு உடனடியாக மா கொள்முதல் விலையை நிா்ணயம் செய்ய வேண்டும் என அதிமுக துணை பொதுச் செயலாளா் கே.பி.முனுசாமி எம்எல்ஏ (வேப்பனப்பள்ளி) க... மேலும் பார்க்க

கிராமம் தோறும் வீடு வீடாக சென்றடைகிறது முருக பக்தா்கள் மாநாடு அழைப்பிதழ்.

மதுரையில் வருகின்ற 22 ம் தேதி நடைபெறவுள்ள முருக பக்தா்கள் மாநாட்டில் கலந்துக்கொள்ள வேண்டி, ஊத்தங்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்கள் தோறும், வீடு வீடாக சென்று முருக பக்தா்கள் மாநாட... மேலும் பார்க்க

திருமணம் செய்யாமல் ஒரேவீட்டில் வசித்த ஜோடி தூக்கிட்டு தற்கொலை

ஒசூரில் திருமணம் செய்யாமல் (லிவிங் டுகெதா்) ஒரே வீட்டில் வசித்துவந்த இளைஞரும், இளம்பெண்ணும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்கு... மேலும் பார்க்க