செய்திகள் :

சிவகங்கை: ஆடு கோழி திருட வந்ததாகச் சந்தேகம்; அடித்துக் கொல்லப்பட்ட இளைஞர்கள்!

post image

சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே உள்ள அழகமாநகரி கிராமத்தில் நேற்று நள்ளிரவில் ஆடு, கோழிகளை திருட வந்ததாக அப்பகுதியினர் தாக்கியதில் இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

காவல்துறை விசாரணை

திருப்பத்தூர் அருகேயுள்ள கல்லம்பட்டியைச் சேர்ந்த சகோதர்களான மணிகண்டன், (வயது 30) சிவசங்கரன் (எ)விக்னேஷ் (வயது 27) இருவரும் கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

மதகுபட்டி வட்டாரத்தில் சமீபகாலமாக ஆடுகள், கோழிகள் காணாமல் போய் வந்ததால் அப்பகுதி மக்கள் இரவு நேரத்தில் ஊருக்குள் புதிதாக யார் வருகிறார்கள், செல்கிறார்கள் என்று கண்காணித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில், அழகமாநகரியில் உள்ள ஒரு தோப்புக்குள் சத்தம் கேட்டிருக்கிறது. உடனே அப்பகுதியினர் அங்கு சென்று பார்த்தபோது மணிகண்டன் மற்றும் விக்னேஷ் தோப்பிற்குள் இருப்பதை பார்த்ததும் அவர்களை கட்டையாலும் கைகளாலும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனால் மயங்கி விழுந்துள்ளனர்.

காவல்துறை விசாரணை

அதன் பின்பு ஆம்புலன்ஸ் மூலம் இருவரும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.

காவல்துறையினரின் விசாரணையில், அவர்கள் ஆடு, கோழி திருட வந்தபோது தாக்குதல் நடந்ததாக ஊர்காரர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். உண்மையிலேயே திருட வந்தார்களா அல்லது முன்பகை காரணமா என்ற கோணத்தில் மதகுபட்டி காவல்துறையினர் ஊர்காரர்கள் சிலரைப்பிடித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

சகோதர இளைஞர்கள் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம், மதகுபட்டி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொள்ளை முயற்சியில் முதியவர் சுட்டுக் கொலை; முன்னாள் ராணுவ வீரருக்கு ஆயுள் தண்டனை - நடந்தது என்ன?

திருப்பூர் தென்னம்பாளையம் பூசாரியம்மன் தோட்டத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். தொழிலதிபரான இவருடைய தந்தை கருப்பசாமி(60). தாய் சிவகாமி(50). கடந்த 2007-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி, இரவு 9 மணி அளவில் சிவக்கும... மேலும் பார்க்க

'மதுபோதையில் ஏற்பட்ட தகராறு; இளைஞரை வெட்டி குளத்துக்குள் தள்ளிய கும்பல்!' - நடந்தது என்ன?

புதுக்கோட்டை, போஸ் நகர், எட்டாம் வீதியை சேர்ந்த தினேஷ்குமார் (வயது: 23) என்ற இளைஞருக்கும், காந்திநகர் இரண்டாம் வீதி பகுதியைச் சேர்ந்த முகிலன் என்பவருக்கும் இடையே மது போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்... மேலும் பார்க்க

திருமணம் மீறிய உறவு; மனைவியின் நண்பரை அடித்துக் கொலைசெய்த பலகாரக் கடை தொழிலாளி - நடந்தது என்ன?

கரூர் மாவட்டம், க.பரமத்தி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது: 41). இவர், கரூரில் உள்ள ஒரு பலகாரக் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அம்சா (வயது: 35). அதேபோல், மது... மேலும் பார்க்க

`அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி'- எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர் மருமகன் உள்ளிட்டோர் மீது புகார்

சென்னை வெட்டுவாங்கேணி, மகாலட்சுமி தெருவைச் சேர்ந்தவர் மகாராஜா (38). இவர் கடந்த 2-ம் தேதி சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, ``நான் மேற்கண்ட முகவரியில் கடந்த ... மேலும் பார்க்க

ரயில் படிக்கட்டில் நின்று ரீல்ஸ் வெளியிட்ட பெண்; கைதுசெய்து எச்சரித்த ரயில்வே போலீஸ்- நடந்தது என்ன?

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த இளம் பெண் ஷகீலா பானு(30). இவர் ரீல்ஸ் போடுவதன் மூலம் இன்ஸ்டாவில் பிரபலம். இவர் பெங்களூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தபோது ஓடும்... மேலும் பார்க்க

கரூர்: 'கனடாவில் உடனே வேலை' - விவசாயியிடம் ரூ. 5.70 லட்சம் ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

கரூர் மாவட்டம், புகளூர் நடுநானப்பரப்பு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பாலசுப்பிரமணியன்(வயது 60). இவரது மகன் மனோஜ் பிரபாகர். இவர், பி.எஸ்.சி வேளாண் படித்து முடித்துவிட்டு வேலை இல்லாமல் வீட்டிலிருந்து வந்... மேலும் பார்க்க