செய்திகள் :

சென்னை: காதலியைக் கொன்ற காதலன் தற்கொலை; கணவன் மனைவி எனச் சொல்லித் தங்கியவர்களுக்கு என்ன நடந்தது?

post image

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ் (19). இவர் அரசுக் கல்லூரி ஒன்றில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அபிநயா (19). இவரும் ஆகாஷ் படித்த கல்லூரியில் ஆங்கில இலக்கியம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

ஒரே மாவட்டத்தைச் சேர்ந்த இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சென்னை வந்த இருவரும் கணவன் - மனைவி என்று கூறி, பெரம்பூர் ராஜீவ்காந்தி நகரில் வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருக்கிறார்கள்.

தற்கொலை
தற்கொலை

கடந்த 2-ம் தேதி ஆகாஷ், அபிநயா ஆகியோர் தங்கியிருந்த வீடு நீண்ட நேரமாகத் திறக்கப்படவில்லை.

அதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் எட்டிப்பார்த்தனர். அப்போது ஆகாஷ் தூக்கில் தொங்கிய நிலையிலும் அபிநயா, ரத்த வெள்ளத்திலும் இறந்து கிடந்தனர்.

அதனால் அதிர்ச்சியடைந்தவர்கள், உடனடியாக ஐ.சி.எஃப் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த இன்ஸ்பெக்டர் தனராஜ் தலைமையிலான போலீஸார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.

பின்னர் இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காதலி அபிநயாவைக் காதலன் ஆகாஷ் கொலை செய்துவிட்டு அவரும் தற்கொலை செய்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

Murder
Murder

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கொலை செய்யப்பட்ட இளம்பெண் அபிநயாவின் பெற்றோருக்கும் தற்கொலை செய்து கொண்ட ஆகாஷின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்திருக்கிறோம்.

காதல் ஜோடி தங்கியிருந்த வீடு முழுவதும் சோதனை நடத்தியதோடு இருவரின் செல்போன்களையும் ஆய்வுக்குட்படுத்தியிருக்கிறோம். விசாரணை முடிவில்தான் என்ன நடந்தது என்று தெரியவரும்" என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

'மதுபோதையில் ஏற்பட்ட தகராறு; இளைஞரை வெட்டி குளத்துக்குள் தள்ளிய கும்பல்!' - நடந்தது என்ன?

புதுக்கோட்டை, போஸ் நகர், எட்டாம் வீதியை சேர்ந்த தினேஷ்குமார் (வயது: 23) என்ற இளைஞருக்கும், காந்திநகர் இரண்டாம் வீதி பகுதியைச் சேர்ந்த முகிலன் என்பவருக்கும் இடையே மது போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்... மேலும் பார்க்க

திருமணம் மீறிய உறவு; மனைவியின் நண்பரை அடித்துக் கொலைசெய்த பலகாரக் கடை தொழிலாளி - நடந்தது என்ன?

கரூர் மாவட்டம், க.பரமத்தி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது: 41). இவர், கரூரில் உள்ள ஒரு பலகாரக் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அம்சா (வயது: 35). அதேபோல், மது... மேலும் பார்க்க

`அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி'- எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர் மருமகன் உள்ளிட்டோர் மீது புகார்

சென்னை வெட்டுவாங்கேணி, மகாலட்சுமி தெருவைச் சேர்ந்தவர் மகாராஜா (38). இவர் கடந்த 2-ம் தேதி சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, ``நான் மேற்கண்ட முகவரியில் கடந்த ... மேலும் பார்க்க

ரயில் படிக்கட்டில் நின்று ரீல்ஸ் வெளியிட்ட பெண்; கைதுசெய்து எச்சரித்த ரயில்வே போலீஸ்- நடந்தது என்ன?

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த இளம் பெண் ஷகீலா பானு(30). இவர் ரீல்ஸ் போடுவதன் மூலம் இன்ஸ்டாவில் பிரபலம். இவர் பெங்களூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தபோது ஓடும்... மேலும் பார்க்க

கரூர்: 'கனடாவில் உடனே வேலை' - விவசாயியிடம் ரூ. 5.70 லட்சம் ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

கரூர் மாவட்டம், புகளூர் நடுநானப்பரப்பு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பாலசுப்பிரமணியன்(வயது 60). இவரது மகன் மனோஜ் பிரபாகர். இவர், பி.எஸ்.சி வேளாண் படித்து முடித்துவிட்டு வேலை இல்லாமல் வீட்டிலிருந்து வந்... மேலும் பார்க்க

``ISI தொடர்பு; பாகிஸ்தானுக்கு உளவு..'' - ஜோதி மல்ஹோத்ராவுக்கு நெருக்கமான யூடியூபர் பஞ்சாப்பில் கைது

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக சமீப காலமாக ஹரியானா, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் 12-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில் போர்க்கப்பல்களை ... மேலும் பார்க்க