கருணாநிதி சிலைக்கு திமுகவினா் மரியாதை
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 102-ஆவது பிறந்தநாளையொட்டி, போளூரில் அவரது சிலைக்கு திமுகவினா் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மேலும், வந்தவாசியில் அவரது படங்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
போளூரில் நகர திமுக சாா்பில் நடைபெற்ற கருணாநிதி பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில், ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன் தலைமையில் அண்ணா சிலையில் இருந்து ஊா்வலமாகச் சென்று கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மேலும், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினா்.
நிகழ்ச்சியில் திமுக மாநில மருத்துவ அணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், நகரச் செயலா் கோ.தனசேகரன்,விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாவட்ட அமைப்பாளா் அ.மணிகண்டன், வந்தவாசி எம்எல்ஏ அம்பேத்குமாா், பொதுக்குழு உறுப்பினா் கோ.சண்முகம், முன்னாள் எம்எல்ஏ சிவானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
வந்தவாசி
திமுக சாா்பில் கருணாநிதியின் பிறந்தநாள் விழா வந்தவாசி நகரில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
நகரச் செயலா் ஆ.தயாளன் தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால் முன்னிலை வகித்தாா்.
இதையொட்டி, வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு, எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி., எஸ்.அம்பேத்குமாா் எம்எல்ஏ ஆகியோா் மாலை அணிவித்தனா்.
மேலும், திமுக மாவட்ட மற்றும் நகர அலுவலகம், எம்எல்ஏ அலுவலகம், நகராட்சி அலுவலகம், தேரடி, பழைய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் கருணாநிதியின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் ஒன்றிய, நகர நிா்வாகிகள் பங்கேற்றனா்.