செய்திகள் :

Tiger: பைக்காரவை தொடர்ந்து முதுமலையில் இறந்து கிடந்த ஆண் புலி... தொடரும் சோகம்!

post image

வங்கப் புலிகளின் வாழிடத்தில் உலக அளவில் மிக முக்கிய பகுதியாக நீலகிரி உயர்ச்சூழல் மண்டலம் விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் முதுமலை& சத்தியமங்கலம் , கேரளாவின் முத்தங்கா, கர்நாடகாவின் பந்திப்பூர் ஆகிய அடர் வனப் பகுதிகளை உள்ளடக்கிய‌ இந்த பகுதிகளில் புலிகளின் எண்ணிக்கை கணிசமாக இருக்கிறது. ஆனால், அவற்றுக்கான வாழிட எல்லை பற்றாக்குறையாகவே இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வனத்தை விட்டு வெளியேற்றப்படும் புலிகள் பெருந்தோட்டங்களில் வாழிட எல்லைகளை வகுத்துக் கொண்டு தஞ்சமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

இறந்து கிடந்த ஆண் புலி

நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி, கூடலூர் ஆகிய பகுதிகளில் தனியார் பெருந்தோட்டங்களில் மர்மமான முறையில் புலிகள் இறப்பது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில், சுமார் 8 வயது மதிக்கத்தக்க ஆண் புலி ஒன்று பைக்காரா வனப்பகுதியில் கடந்த 30 - ம்‌ தேதி இறந்து கிடப்பதை வனத்துறையினர் கண்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சீகூர் வனப்பகுதியில் இளம் ஆண் புலி ஒன்று பரிதாபமாக உயிரிழந்துளள்ளது.

இது குறித்து தெரிவித்த வனத்துறையினர், " பைக்காரா வன பகுதியில் இறந்து கிடந்த ஆண் புலியின் உடலில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் இறப்புக்கான காரணம் விரைவில் தெரியவரும். இதே போல் தற்போது முதுமலையில் இறந்து கிடக்கும் புலியின் குறித்தும்

இறந்து கிடந்த ஆண் புலி

தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் உடற்கூறாய்வு மற்றும் மற்ற ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். இறந்து கிடந்த இரண்டு புலிகளின் உடலில் இருந்தும் நகம், பல் போன்றவை வெட்டி எடுக்கப்படவில்லை" எனக் குறிப்பிட்டு இருக்கின்றனர்.

தூத்துக்குடி: ஒருமணி நேரத்தில் நடந்த இரட்டைக்கொலை; முன் விரோதம் காரணமா? பழிக்குப்பழியா?

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி - கடலையூர் சாலையில் உள்ள டாஸ்மாக் அருகே நேற்று இரவு நின்று கொண்டிருந்த வள்ளுவர்நகரைச் சேர்ந்த பிரகதீஸ் என்பவரை மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டி செய்து விட்டு ... மேலும் பார்க்க

பொள்ளாச்சி: கொலை வழக்கில் கைதானவர்களிடம் 18 பவுன் நகை, 1.50 லட்சம் பணம் கையாடல்- உதவி ஆய்வாளர் கைது

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ரத்தின சபாபதிபுரம் பகுதியில் ஒரு மனநல காப்பகம் செயல்பட்டு வந்தது. சூலூர் அருகே உள்ள கரவளி மாதப்பூர் பகுதியைச் சேர்ந்த வருண்காந்த் என்ற ஆட்டிசம் பாதிக்கப்பட்ட இளைஞர் இங்கு அன... மேலும் பார்க்க

தூத்துக்குடி: கார் மோதி இளைஞர் பலி; வழக்கிலிருந்து தப்பிக்க காரை விற்ற நால்வர் சிக்கியது எப்படி?

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள சிலோன் காலனியைச் சேர்ந்தவர் ரவிராஜ்குமார். இவர், சொந்தமாக போர்வெல் லாரி வைத்துள்ளார். கடந்த 22-ம் தேதி இரவு தனது பைக்கில் தூத்துக்குடியில் இருந்து அவரது... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: போர்க்கப்பல்களை உளவு பார்த்த மும்பை பொறியாளர் கைது; விசாரணையில் வெளியான பகீர் தகவல்

மும்பை டாக்யார்டு கப்பல் கட்டும் தளத்தில் இந்தியக் கடற்படைக்குத் தேவையான போர்க்கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் தனியார் நிறுவனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அது போன்ற ஒரு தனியார் நிறுவனத்தில் பணி... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: முன்னாள் காதலியுடனான உறவைத் தட்டிக்கேட்ட மனைவி; விஷ ஊசி போட்டுக் கொன்ற ராணுவ வீரர்

மகாராஷ்டிரா மாநிலம் துலே அருகில் உள்ள வால்வாடி என்ற இடத்தைச் சேர்ந்தவர் கபில் பாகுல். இவரது மனைவி பூஜா(38). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கபில் பாகுல் ராணுவத்தில் கிளார்க்காக இருக்கிறார... மேலும் பார்க்க

சென்னை: "உன் காதலியை மறந்துவிடு" - சினிமா உதவி இயக்குநரைக் கடத்திய கும்பல்; தட்டித் தூக்கிய போலீஸ்

சென்னை அரும்பாக்கம் கோலபெருமாள்பள்ளி தெருவில் வசித்து வருபவர் சினிமா இயக்குநர் சுசீந்திரன். இவரிடம் உதவி இயக்குநராக ராஜகுமரன் என்பவர் பணியாற்றி வருகிறார்.இவரைக் கடந்த 29.5.2025-ம் தேதி மதியம் முதல் கா... மேலும் பார்க்க