செய்திகள் :

சென்னை: "உன் காதலியை மறந்துவிடு" - சினிமா உதவி இயக்குநரைக் கடத்திய கும்பல்; தட்டித் தூக்கிய போலீஸ்

post image

சென்னை அரும்பாக்கம் கோலபெருமாள்பள்ளி தெருவில் வசித்து வருபவர் சினிமா இயக்குநர் சுசீந்திரன். இவரிடம் உதவி இயக்குநராக ராஜகுமரன் என்பவர் பணியாற்றி வருகிறார்.

இவரைக் கடந்த 29.5.2025-ம் தேதி மதியம் முதல் காணவில்லை எனச் சுசீந்திரன் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்ததோடு காணாமல் போன ராஜகுமரனைத் தேடிவந்தனர்.

இந்தநிலையில் கடந்த 30-ம் தேதி காணாமல் போன ராஜகுமரன் தானாகவே வீடு திரும்பினார்.

சந்திரசேகர்
சந்திரசேகர்

இதையடுத்து அவர் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகினார்.

அப்போது அவர், தன்னை 5 பேர் சேர்ந்து காரில் கடத்தி பைக்கையும் செல்போனையும் பறித்து விட்டுச் சென்றதாகத் தெரிவித்தார்.

மேலும் தான் காதலித்து வரும் பெண்ணை மறந்து விடும்படி தன்னைக் கடத்தியவர்கள் மிரட்டியதாகத் தெரிவித்தார்.

ராஜகுமரன் அளித்த தகவலின்படி மாம்பலத்தைச் சேர்ந்த சந்திரசேகர், சைதாப்பேட்டையைச் சேர்ந்த கார்த்திகேயன், அகஸ்டின், தி.நகரைச் சேர்ந்த லலித் ஆதித்யா, கே.கே.நகரைச் சேர்ந்த திவாகர் ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து ராஜகுமரனின் செல்போன், பைக் மற்றும் கைதானவர்களின் 5 செல்போன்கள், பைக்குகள், 29,000 ரூபாய் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.

கைதானவர்களிடம் விசாரித்தபோது ராஜகுமரன் கடத்தப்பட்டதற்கான காரணம் தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சம்பவத்தன்று உதவி இயக்குநர் ராஜகுமரன் அரும்பாக்கம் ரசாக் கார்டன் பகுதியில் உள்ள கடையில் பைக்கை நிறுத்திவிட்டு டீ குடிக்கச் சென்றிருக்கிறார்.

Kidnapped

அப்போது அவ்வழியாக காரில் வந்த கும்பல் ஒன்று ராஜகுமரனின் பைக்கை மோதியிருக்கிறது. அதனால் அந்தக் கும்பலுக்கும் ராஜகுமரனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

அதன்பிறகுதான் ராஜகுமரன் காரில் கடத்தப்பட்டிருக்கிறார். அவரை காருக்குள் வைத்தே தாக்கிய கும்பல், ராஜகுமரன் காதலித்து வரும் பெண்ணை மறந்துவிடுமாறு மிரட்டியிருக்கிறார்கள்.

அதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். இந்தக் கடத்தல் சம்பவத்தில் இன்னும் சிலரைத் தேடிவருகிறோம். காதல் விவகாரத்தில் இந்தக் கடத்தல் சம்பவம் நடந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது" என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

பொள்ளாச்சி: கொலை வழக்கில் கைதானவர்களிடம் 18 பவுன் நகை, 1.50 லட்சம் பணம் கையாடல்- உதவி ஆய்வாளர் கைது

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ரத்தின சபாபதிபுரம் பகுதியில் ஒரு மனநல காப்பகம் செயல்பட்டு வந்தது. சூலூர் அருகே உள்ள கரவளி மாதப்பூர் பகுதியைச் சேர்ந்த வருண்காந்த் என்ற ஆட்டிசம் பாதிக்கப்பட்ட இளைஞர் இங்கு அன... மேலும் பார்க்க

Tiger: பைக்காரவை தொடர்ந்து முதுமலையில் இறந்து கிடந்த ஆண் புலி... தொடரும் சோகம்!

வங்கப் புலிகளின் வாழிடத்தில் உலக அளவில் மிக முக்கிய பகுதியாக நீலகிரி உயர்ச்சூழல் மண்டலம் விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் முதுமலை& சத்தியமங்கலம் , கேரளாவின் முத்தங்கா, கர்நாடகாவின் பந்திப்பூர் ஆகிய... மேலும் பார்க்க

தூத்துக்குடி: கார் மோதி இளைஞர் பலி; வழக்கிலிருந்து தப்பிக்க காரை விற்ற நால்வர் சிக்கியது எப்படி?

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள சிலோன் காலனியைச் சேர்ந்தவர் ரவிராஜ்குமார். இவர், சொந்தமாக போர்வெல் லாரி வைத்துள்ளார். கடந்த 22-ம் தேதி இரவு தனது பைக்கில் தூத்துக்குடியில் இருந்து அவரது... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: போர்க்கப்பல்களை உளவு பார்த்த மும்பை பொறியாளர் கைது; விசாரணையில் வெளியான பகீர் தகவல்

மும்பை டாக்யார்டு கப்பல் கட்டும் தளத்தில் இந்தியக் கடற்படைக்குத் தேவையான போர்க்கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதில் தனியார் நிறுவனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அது போன்ற ஒரு தனியார் நிறுவனத்தில் பணி... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: முன்னாள் காதலியுடனான உறவைத் தட்டிக்கேட்ட மனைவி; விஷ ஊசி போட்டுக் கொன்ற ராணுவ வீரர்

மகாராஷ்டிரா மாநிலம் துலே அருகில் உள்ள வால்வாடி என்ற இடத்தைச் சேர்ந்தவர் கபில் பாகுல். இவரது மனைவி பூஜா(38). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கபில் பாகுல் ராணுவத்தில் கிளார்க்காக இருக்கிறார... மேலும் பார்க்க

"குழந்தைகள் உடலில் சாத்தான்" - மகன்களை ஸ்கிப்பிங் கயிற்றால் அடித்த பாஸ்டர் தந்தை கைது; நடந்தது என்ன?

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியைச் சேர்ந்தவர் கிங்ஸ்லி(42).இவர் அந்தப் பகுதியில் உள்ள ரசல்ராஜ் அடுக்குமாடிக்குடியிருப்பு ஒன்றில் தனது மனைவி சஜினி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வாடகைக்குக் குடியிர... மேலும் பார்க்க