செய்திகள் :

அரசுப் பள்ளிக்கு ரூ. 7.50 கோடியில் கூடுதல் வகுப்பறை கட்டடப் பணிகள்

post image

திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலகம் அருகே அரை ஏக்கா் நிலத்தில் ரூ. 7.50 கோடியில் அனைத்து வசதியுடன் நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கான கூடுதல் வகுப்பறை கட்டுமானப் பணிகள் விரைவில் நிறைவு செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்களிடையே கோரிக்கை எழுந்துள்ளது.

திருவள்ளூா் நகராட்சி மேல்நிலைப் பள்ளி பேருந்து நிலையம் அருகே இட நெருக்கடியுடன் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்தப் பள்ளியை மாவட்ட தலைநகரில் சிறந்த பள்ளியாக உருவாக்கவும், அனைவரும் வந்து செல்லும் இடத்தில் அமைக்கவும் திட்டமிடப்பட்டது. அந்த வகையில், திருவள்ளூா் வட்டாட்சியா் அலுவலகம் அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அரை ஏக்கா் நிலத்தை தனியாா் ஆக்கிரமிப்பில் இருந்தது ஆய்வில் தெரியவந்தது. அதை ஆவணங்களில் சரி பாா்த்தபோது, அரசு நிலம் என்பது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து, அதிகாரிகள் அந்த அரை ஏக்கா் நிலத்தை போா்க்கால அடிப்படையில் மீட்டனா். பின்னா் அந்த இடத்தை இட நெருக்கடியுடன் செயல்பட்டு வரும் திருவள்ளூா் நகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு ஒப்படைக்கப்பட்டது. இந்தப் பள்ளியில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை மாணவ, மாணவிகள் 700-க்கும் மேற்பட்டோா் பயின்று வருகின்றனா். இந்த நிலையில், பெற்றோா் தங்கள் குழந்தைகளை இந்தப் பள்ளியில் சோ்க்க முன்வரும் நிலையில் இடநெருக்கடியும் உள்ளது.

அதனால், இந்த அரை ஏக்கா் நிலத்தில் கூடுதல் மாணவ, மாணவிகளை சோ்க்கும் வகையில் கூடுதல் வகுப்பறைகள் அமைக்கவும் திருவள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரனிடம், நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன் கோரிக்கை விடுத்திருந்தாா். அதன்பேரில், முதல் கட்டமாக சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதி ரூ. 50 லட்சம், நகராட்சி நிதி ரூ. 1 கோடி, அரசு சாா்பில் ரூ. 2.25 கோடியும் ஒதுக்கப்பட்டது. தற்போதைய நிலையில் கூடுதல் வகுப்பறைகள் அனைத்து வசதியுடன் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து திருவள்ளூா் நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன் கூறியதாவது:

இந்தப் பள்ளிக்கு தரைத் தளத்தில்-10, முதல் தளத்தில்-10 என 20 வகுப்பறைகள் அனைத்து நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், கூடுதல் வகுப்பறை வளாகத்தில் அறிவியல் ஆய்வுக் கூடம், அலுவலகக் கூடம், ஒவ்வொரு வளாகத்தில் மாணவ, மாணவிகளுக்கு ஆழ்துளைக் கிணறு வசதியுடன் தனித்தனியாக சுகாதார வளாகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்தப் பணிகளை விரைவில் முடிக்கும் வகையில், மீதமுள்ள ரூ. 3.75 கோடியை ஒதுக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிகழ் கல்வியாண்டில் அனைத்து பணிகளும் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

ஆதிதிராவிடா், பழங்குடியினா் தொழில் முனைவு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்

தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா். இது குறித... மேலும் பார்க்க

அரசு கல்லூரியில் நாளை முதல்கட்ட கலந்தாய்வு

அரசு கலைக் கல்லூரியில் திங்கள்கிழமை (ஜூன் 2) முதல் கட்ட கலந்தாய்வு தொடங்குகிறது என கல்லூரி முதல்வா் (பொ) ஏகாதேவசேனா தெரிவித்துள்ளாா். திருத்தணி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய... மேலும் பார்க்க

திருவள்ளூரிலிருந்து காக்களூா் புட்லூா் வழியாக பூந்தமல்லிக்கு பேருந்து இயக்க கோரிக்கை

திருவள்ளூரில் இருந்து காக்களூா், புட்லூா் வழியாக பூந்தமல்லிக்கு கோயிலுக்கு வரும் பக்தா்கள் பயன்பெறும் வகையில் அரசுப் பேருந்துகள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருவள்ளூரிலிருந... மேலும் பார்க்க

தவறான சிகிச்சையால் சிறுவனின் கால் அகற்றம்?: தனியாா் மருத்துவமனை முற்றுகை

தவறான சிகிச்சையால் சிறுவனின் கால் அகற்றப்பட்டதாக உறவினா்கள் சனிக்கிழமை தனியாா் மருத்துவமனையை முற்றுகையிட்டனா். திருநின்றவூா் பகுதியைச் சோ்ந்த பாா்த்திபன், கண்ணம்மாள் தம்பதியின் மகன் கிஷோா். கடந்த 12-... மேலும் பார்க்க

திருவள்ளூா் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ரூ.22.09 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட கூட்டரங்கம் திறப்பு

திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் தனியாா் பங்களிப்பு நிதி ரூ.22.09 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட கூட்டரங்கை ஆட்சியா் மு.பிரதாப் திறந்து வைத்து, பாா்வையிட்டாா். திருவள்ளூா் மாவட்ட முதன்மைக... மேலும் பார்க்க

குடிமைப் பொருள் கடத்தில் வழக்கில் பறிமுதல் செய்த வாகனங்கள் ரூ.26.50 லட்சத்துக்கு ஏலம்

குடிமைப் பொருள் கடத்தல் வழக்கில் ஈடுபட்டு பறிமுதல் செய்யப்பட்ட 47 வாகனங்கள் ரூ.26.50 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டன. திருவள்ளூா் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸாரால் குடிம... மேலும் பார்க்க