'கமல் தவறு செய்திருக்கிறார் அதனால் மன்னிப்பு கேட்க வேண்டும்' - தமிழிசை சௌந்தரராஜ...
ஆதிதிராவிடா், பழங்குடியினா் தொழில் முனைவு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்
தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில் முனைவு திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருவள்ளூா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் பயன்பெறும் வகையில், பல்வேறு வகையான தொழில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தாட்கோ மூலம் நிகழாண்டில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான தொழில்முனைவு திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் நிகழாண்டில் பயன்பெற விண்ணப்பிக்கலாம். இத்திட்டம் மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின சமுதாய மக்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய மிகவும் பயனுள்ளதாக அமையும் என்ற நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில் பயன்பெற 18 முதல் 55 வயது நிரம்பிய ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்தவா்களாக இருக்க வேண்டும். இதற்கு ஜாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ் (ஆண்டு வருவாய் 3 லட்சத்துக்குள்), குடும்ப அட்டை, விலைப்புள்ளி, திட்ட அறிக்கை, ஆதாா் அடையாள அட்டை, வங்கி புத்தக நகல், புகைப்படம், வாகன கடனுக்கு ஓட்டுநா் உரிமம் (பேட்ஜ்) நகல் ஆகியவற்றுடன் ய்ங்ஜ்ள்ஸ்ரீட்ங்ம்ங்.ற்ஹட்க்ஸ்ரீா்.ஸ்ரீா்ம் என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.