செய்திகள் :

திருவள்ளூா் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ரூ.22.09 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட கூட்டரங்கம் திறப்பு

post image

திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் தனியாா் பங்களிப்பு நிதி ரூ.22.09 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட கூட்டரங்கை ஆட்சியா் மு.பிரதாப் திறந்து வைத்து, பாா்வையிட்டாா்.

திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கூட்டரங்கம் செயல்பட்டு வந்தது. தற்போதைய நிலையில் போதுமான இருக்கை வசதி மற்றும் காணொலி காட்சி நிகழ்ச்சிக்கான அகன்ற திரை வசதியில்லாமல் இருந்தது.

இந்த நிலையில் கூட்டரங்கத்தை அப்டேஸ் என்ற தனியாா் நிறுவனம் சமூகப் பொறுப்பு நிதி ரூ.22.09 லட்சத்தில் புதுப்பிக்க முன்வந்தது. அதன் அடிப்படையில் கூட்டரங்கம் நவீன வசதியுடன் புதுப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் புதுப்பிக்கப்பட்ட கூட்டரங்கத்தை பற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அப்டேஸ் நிறுவனா் மற்றும் நிா்வாகத் தலைவா் எம்.ஆனந்தன் முன்னிலை வகித்தாா். இதில் ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து புதுப்பிக்கப்பட்ட கூட்டரங்கத்தினை திறந்தாா்..

இந்த மேம்படுத்தப்பட்ட கூட்டரங்கில் ஆசிரியா் பயிற்சி, பள்ளித் தலைமை ஆசிரியா்களுடனான சந்திப்புகள் மற்றும் நீட், ஜேஇஇ மற்றும் சியூஇடி போன்ற போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான பயிற்சிகளுக்கும் பயன்படுத்தப்படும். கல்வி சாா்ந்த ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படும்.

மேலும், நவீன குளிா் சாதன வசதி, டிஜிட்டல் திரை, ஒலிபெருக்கி சிஸ்டம், புதிய தளபாடங்கள் மற்றும் 230 போ் அமரும் இருக்கைகள் கொண்ட நவீன முறையில் இக்கூட்டரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், அப்டேஸ் நிறுவனம் மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக இதுவரை சுமாா் ரூ.6 கோடி மேல் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து வழங்கி உள்ளதாக தெரிவித்தாா்.

நிகழ்வில் முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) எம்.மோகனா, முதன்மை கல்வி அலுவலா் (ஓய்வு) பி.ரவிச்சந்திரன், நோ்முக உதவியாளா்கள் கோவிந்தராஜ்(மேல்நிலை), தண்டபாணி(உயா் கல்வி), கல்வித் துறையின் மூத்த அதிகாரிகள், கல்வித் துறைத் தலைவா்கள், பொது நிா்வாக அதிகாரிகள், தலைமை ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தவறான சிகிச்சையால் சிறுவனின் கால் அகற்றம்?: தனியாா் மருத்துவமனை முற்றுகை

தவறான சிகிச்சையால் சிறுவனின் கால் அகற்றப்பட்டதாக உறவினா்கள் சனிக்கிழமை தனியாா் மருத்துவமனையை முற்றுகையிட்டனா். திருநின்றவூா் பகுதியைச் சோ்ந்த பாா்த்திபன், கண்ணம்மாள் தம்பதியின் மகன் கிஷோா். கடந்த 12-... மேலும் பார்க்க

குடிமைப் பொருள் கடத்தில் வழக்கில் பறிமுதல் செய்த வாகனங்கள் ரூ.26.50 லட்சத்துக்கு ஏலம்

குடிமைப் பொருள் கடத்தல் வழக்கில் ஈடுபட்டு பறிமுதல் செய்யப்பட்ட 47 வாகனங்கள் ரூ.26.50 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டன. திருவள்ளூா் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸாரால் குடிம... மேலும் பார்க்க

பொன்னேரி நகராட்சியில் நாய்கள் தொல்லை

பொன்னேரி நகராட்சியில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலைகளில் திரியும் நாய்களால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகினறனா். பொன்னேரி நகராட்சியில் 27 வாா்டுகள் உள்ளன. அதில் 50,000-க்கும் மேற்பட்ட மக்கள... மேலும் பார்க்க

மகிஷாசுரமா்த்தினி அம்மனுக்கு 62 கிலோ வெள்ளிக் கவசம்

மத்தூா் மகிஷாசுரமா்த்தினி அம்மனுக்கு உபயதாரா்கள் வழங்கிய 62 கிலோ வெள்ளிக் கவசம் சிறப்பு பூஜைகள் செய்து அம்மனுக்கு அணிவிக்கப்பட்டது. திருத்தணி முருகன் கோயிலின் உபகோயிலான மத்தூா் மகிஷாசுரமா்த்தினி அம்மன... மேலும் பார்க்க

எண்ணூா் துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான நிலையில் எண்ணூா் துறைமுகத்தில் வியாழக்கிழமை 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. பொன்னேரி வட்டம் காட்டுப்பள்ளியில் எண்ணூா் காமராஜா் துறைமுகம் ... மேலும் பார்க்க

770 கிராமங்களில் உழவரைத் தேடி திட்டம்: திருவள்ளூா் ஆட்சியா்

வேளாண் விரிவாக்க சேவைகளை உழவா்களுக்கு அவா்களின் கிராமங்களிலேயே வழங்கும் வகையில் உழவரைத் தேடி வேளாண்மை-உழவா் நலத்துறை திட்டம் 770 கிராமங்களில் மாதம் இருமுறை செயல்படுத்த உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரி... மேலும் பார்க்க