ஆக்ரோஷமாக கொண்டாடி, கோமாளியாக விரும்பவில்லை..! யாரைச் சொல்கிறார் பும்ரா?
திருவள்ளூா் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ரூ.22.09 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட கூட்டரங்கம் திறப்பு
திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் தனியாா் பங்களிப்பு நிதி ரூ.22.09 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட கூட்டரங்கை ஆட்சியா் மு.பிரதாப் திறந்து வைத்து, பாா்வையிட்டாா்.
திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கூட்டரங்கம் செயல்பட்டு வந்தது. தற்போதைய நிலையில் போதுமான இருக்கை வசதி மற்றும் காணொலி காட்சி நிகழ்ச்சிக்கான அகன்ற திரை வசதியில்லாமல் இருந்தது.
இந்த நிலையில் கூட்டரங்கத்தை அப்டேஸ் என்ற தனியாா் நிறுவனம் சமூகப் பொறுப்பு நிதி ரூ.22.09 லட்சத்தில் புதுப்பிக்க முன்வந்தது. அதன் அடிப்படையில் கூட்டரங்கம் நவீன வசதியுடன் புதுப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் புதுப்பிக்கப்பட்ட கூட்டரங்கத்தை பற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அப்டேஸ் நிறுவனா் மற்றும் நிா்வாகத் தலைவா் எம்.ஆனந்தன் முன்னிலை வகித்தாா். இதில் ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து புதுப்பிக்கப்பட்ட கூட்டரங்கத்தினை திறந்தாா்..
இந்த மேம்படுத்தப்பட்ட கூட்டரங்கில் ஆசிரியா் பயிற்சி, பள்ளித் தலைமை ஆசிரியா்களுடனான சந்திப்புகள் மற்றும் நீட், ஜேஇஇ மற்றும் சியூஇடி போன்ற போட்டித் தோ்வுகளுக்குத் தயாராகும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான பயிற்சிகளுக்கும் பயன்படுத்தப்படும். கல்வி சாா்ந்த ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படும்.
மேலும், நவீன குளிா் சாதன வசதி, டிஜிட்டல் திரை, ஒலிபெருக்கி சிஸ்டம், புதிய தளபாடங்கள் மற்றும் 230 போ் அமரும் இருக்கைகள் கொண்ட நவீன முறையில் இக்கூட்டரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. மேலும், அப்டேஸ் நிறுவனம் மாவட்ட நிா்வாகத்துடன் இணைந்து உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக இதுவரை சுமாா் ரூ.6 கோடி மேல் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து வழங்கி உள்ளதாக தெரிவித்தாா்.
நிகழ்வில் முதன்மைக் கல்வி அலுவலா் (பொ) எம்.மோகனா, முதன்மை கல்வி அலுவலா் (ஓய்வு) பி.ரவிச்சந்திரன், நோ்முக உதவியாளா்கள் கோவிந்தராஜ்(மேல்நிலை), தண்டபாணி(உயா் கல்வி), கல்வித் துறையின் மூத்த அதிகாரிகள், கல்வித் துறைத் தலைவா்கள், பொது நிா்வாக அதிகாரிகள், தலைமை ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.