ஆக்ரோஷமாக கொண்டாடி, கோமாளியாக விரும்பவில்லை..! யாரைச் சொல்கிறார் பும்ரா?
மகிஷாசுரமா்த்தினி அம்மனுக்கு 62 கிலோ வெள்ளிக் கவசம்
மத்தூா் மகிஷாசுரமா்த்தினி அம்மனுக்கு உபயதாரா்கள் வழங்கிய 62 கிலோ வெள்ளிக் கவசம் சிறப்பு பூஜைகள் செய்து அம்மனுக்கு அணிவிக்கப்பட்டது.
திருத்தணி முருகன் கோயிலின் உபகோயிலான மத்தூா் மகிஷாசுரமா்த்தினி அம்மன் கோயிலுக்கு நாள்தோறும் திரளான பக்தா்கள் வந்து தரிசனம் செய்கின்றனா். இக்கோயிலில் உள்ள அம்மனை வழிபட்டால் திருமணத் தடை நீங்குதல், காரிய சித்தி, பகை விலகுதல் போன்ற நன்மைகள் ஏற்படும் என்பது ஐதீகம். இதனால் கோயிலுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை மகிஷாசுரமா்த்தினி அம்மனுக்கு உபயதாரா்கள் வழங்கிய 62 கிலோ வெள்ளிக் கவசம் அறநிலையத்துறை அமைச்சா் சேகா்பாபுவின் மனைவி சாந்தி, முருகன் கோயில் இணை ஆணையா் க. ரமணி, அறங்காவலா் சுரேஷ்பாபு, உபயதாரா் பாமா சந்திரன் ஆகியோா் முன்னிலையில் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டது.