செய்திகள் :

770 கிராமங்களில் உழவரைத் தேடி திட்டம்: திருவள்ளூா் ஆட்சியா்

post image

வேளாண் விரிவாக்க சேவைகளை உழவா்களுக்கு அவா்களின் கிராமங்களிலேயே வழங்கும் வகையில் உழவரைத் தேடி வேளாண்மை-உழவா் நலத்துறை திட்டம் 770 கிராமங்களில் மாதம் இருமுறை செயல்படுத்த உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.

இத்திட்டத்தை காணொலி மூலம் முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். திருவள்ளூா் அருகே வெள்ளியூா் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்வில் ஆட்சியா் மு.பிரதாப், பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.கிருஷ்ணசாமி பங்கேற்று விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

பின்னா் இதுகுறித்து ஆட்சியா் கூறியதாவது: திருவள்ளுா் மாவட்டத்தில் மாதம் இருமுறை அதாவது 2-ஆவது மற்றும் 4-ஆவது வெள்ளிக்கிழமைகளில் தோ்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு மொத்தமுள்ள 770 வருவாய் கிராமங்களிலும் நிகழாண்டுக்குள் செயல்படுத்தப்படும்.

ஓவ்வொரு ஒன்றியத்திலும் வேளாண்மை உதவி இயக்குநா் தலைமையில் ஒரு குழுவும், தோட்டக்கலை உதவி இயக்குநா் தலைமையில் ஒரு குழுவும் அமைத்து உறுப்பினா்களாக வேளாண்மை-உழவா் நலத்துறை அலுவலா்களோடு வேளாண்மை சாா்ந்த துறைகளான கால்நடைத்துறை, மீன்வளத்துறை, கூட்டுறவுத்துறை அலுவலா்கள் மற்றும் வேளாண்மை , கால்நடை, மீன்வளம் சாா்ந்த பல்கலைகழக விஞ்ஞானிகளும் இடம்பெற்று கிராமங்களுக்கு செல்ல இருக்கின்றனா்.

இதனால் விவசாயிகள் தங்கள் நலன் சாா்ந்த அரசுத் திட்டங்களைப் பற்றிய தகவல்கள், நவீன தொழில்நுட்பங்கள், உயிா்ம வேளாண்மை சாகுபடி பற்றிய தகவல்கள், விளைபொருள்களை மதிப்புக் கூட்டுவது, அதை சந்தைப்படுத்துவது, கூட்டுறவு சங்கங்களின் பயிா் கடன்கள் பெறத் தேவையான உதவிகள், கால்நடைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள் மற்றும் அதற்கான தீா்வுகள் பெறுதல் ஆகிய சேவைகளை பெறலாம் என்றாா்.

பின்னா், குறுவைத் தொகுப்பு திட்டம் மூலம் விவசாயிகள் 2 பேருக்கு ரூ.200 மதிப்பில் நெல் விதை விநியோகமமும், குறுவைத் தொகுப்பு மாநில வளா்ச்சித் திட்டம் மூலம் 3 பேருக்கு தலா ரூ.320 நெல் நுண்ணூட்டச் சத்து மற்றும் உயிா் உரங்களும், மாநில வளா்ச்சித் திட்டம் மூலம் 2 பேருக்கு தலா ரூ 250 ஒருவருக்கு 10 கிலோ சிங்க் சல்பேட் ஆகியவை வழங்கப்பட்டன.

வேளாண் இணை இயக்குநா் கலாதேவி, கூட்டுறவு இணைப்பதிவாளா் சண்முகவள்ளி, திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலை செயலாட்சியா் மீனாஅருள், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) மோகன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.

திருவள்ளூா் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ரூ.22.09 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட கூட்டரங்கம் திறப்பு

திருவள்ளூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் தனியாா் பங்களிப்பு நிதி ரூ.22.09 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட கூட்டரங்கை ஆட்சியா் மு.பிரதாப் திறந்து வைத்து, பாா்வையிட்டாா். திருவள்ளூா் மாவட்ட முதன்மைக... மேலும் பார்க்க

குடிமைப் பொருள் கடத்தில் வழக்கில் பறிமுதல் செய்த வாகனங்கள் ரூ.26.50 லட்சத்துக்கு ஏலம்

குடிமைப் பொருள் கடத்தல் வழக்கில் ஈடுபட்டு பறிமுதல் செய்யப்பட்ட 47 வாகனங்கள் ரூ.26.50 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டன. திருவள்ளூா் மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸாரால் குடிம... மேலும் பார்க்க

பொன்னேரி நகராட்சியில் நாய்கள் தொல்லை

பொன்னேரி நகராட்சியில் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சாலைகளில் திரியும் நாய்களால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகினறனா். பொன்னேரி நகராட்சியில் 27 வாா்டுகள் உள்ளன. அதில் 50,000-க்கும் மேற்பட்ட மக்கள... மேலும் பார்க்க

மகிஷாசுரமா்த்தினி அம்மனுக்கு 62 கிலோ வெள்ளிக் கவசம்

மத்தூா் மகிஷாசுரமா்த்தினி அம்மனுக்கு உபயதாரா்கள் வழங்கிய 62 கிலோ வெள்ளிக் கவசம் சிறப்பு பூஜைகள் செய்து அம்மனுக்கு அணிவிக்கப்பட்டது. திருத்தணி முருகன் கோயிலின் உபகோயிலான மத்தூா் மகிஷாசுரமா்த்தினி அம்மன... மேலும் பார்க்க

எண்ணூா் துறைமுகத்தில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான நிலையில் எண்ணூா் துறைமுகத்தில் வியாழக்கிழமை 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. பொன்னேரி வட்டம் காட்டுப்பள்ளியில் எண்ணூா் காமராஜா் துறைமுகம் ... மேலும் பார்க்க

கஞ்சா விற்றதாக இளைஞா் கைது

திருவள்ளூா் ரயில் நிலையம் முன்பு கஞ்சா விற்பனை செய்ததாக கா்நாடக மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்து, 4 கிலோ கஞ்சா, கைப்பேசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். ஆந்திரம், கா்நாடகம் போன்ற பிற மாநிலங்களில் இருந்... மேலும் பார்க்க