செய்திகள் :

வார இறுதியில் தங்கம் வாங்கலாமா? இதோ தங்கம் விலை நிலவரம்!

post image

சென்னை: சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலையில் மாற்றமின்றி, ஒரு சவரன் தங்கம் ரூ.71,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மே 26ஆம் தேதி இந்த வாரம் தொடங்கிய போது, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.71,600க்கு விற்பனையான நிலையில், சனிக்கிழமையான இன்று, வார இறுதியில் கிட்டத்தட்ட ரூ.240 குறைந்து ரூ.71,360 என்ற அளவில் விற்பனையாகி வருகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,360-க்கு விற்பனையானது. இன்று காலை இந்த விலையில் மாற்றமின்றி அதே விலையில் உள்ளது.

சென்னையில் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில் புதன்கிழமை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.71,480-க்கு விற்பனையானது. தொடா்ந்து தங்கம் விலை வியாழக்கிழமை மீண்டும் குறைந்தது.

அதன்படி, கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.8,895-க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.71,160-க்கும் விற்பனையானது. இந்த வாரத்தில் இதுதான் மிகவும் குறைவான விலையாகும்.

ஆனால், வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.8,920-க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.71,360-க்கு விற்பனையானது. இந்த விலைதான் சனிக்கிழமையும் நீடிக்கிறது.

வெள்ளி விலை தொடா்ந்து 9-ஆவது நாளாக மாற்றமின்றி கிராம் ரூ.111-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.1,11,000-க்கும் விற்பனையாகி வருகிறது.

டிஷ் டிவியின் 4-வது காலாண்டு இழப்பு ரூ.402.19 கோடி!

புதுதில்லி: டைரக்ட்-டு-ஹோம் நிறுவனமான டிஷ் டிவி இந்தியா லிமிடெட் மார்ச் முடிய உள்ள காலாண்டில் ரூ.402.19 கோடி ஒருங்கிணைந்த நிகர இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்ததுள்ளது.கடந்த வருடம் ஜனவரி முதல் மார்ச் வர... மேலும் பார்க்க

ஹோண்டா கோல்டு விங் டூரின் 50-வது ஆண்டு விழாவுக்கான பைக் அறிமுகம்!

ஹோண்டாவின் கோல்டு விங் டூர் 50-வது ஆண்டுக்கான பதிப்பு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.50 ஆண்டுகளாக சொகுசு பயணங்களுக்கான அதிநவீன வ... மேலும் பார்க்க

டாடாவின் பட்ஜெட்-ஃப்ரீ கார்! புதுப்பிக்கப்பட்ட அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்!

டாடா நிறுவனம் புதுப்பிக்கப்பட்ட அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் காரை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. பம்பர், கதவின் கைப்பிடிகளிலும் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. டாடாவின் பிரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக... மேலும் பார்க்க

வங்கி மோசடி வழக்குகள் குறைந்தன! ஆனால் சந்தோஷப்பட ஒன்றுமில்லை!! ஏன்?

கடந்த 2023-24ஆம் நிதியாண்டைக் காட்டிலும் நடப்பு நிதியாண்டில் வங்கி மோசடி வழக்குகள் குறைந்துள்ளன என்று ஆர்பிஐ ஆண்டறிக்கை தெரிவிக்கிறது.ஆனால், வங்கி மோசடி வழக்குகள்தான் குறைந்திருக்கிறதே தவிர, கடந்த நித... மேலும் பார்க்க

சரிவில் பங்குச் சந்தை! இன்றைய நிலவரம் என்ன?

பங்குச்சந்தைகள் நேற்று ஏற்றத்துடன் முடிவடைந்த நிலையில் இன்று(வெள்ளிக்கிழமை) சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,465.69 என்ற புள்ளிகளில் த... மேலும் பார்க்க

இன்டெல் மணியின் கடனளிப்பு 69% உயா்வு

முன்னணி வங்கியல்லாத நிதி நிறுவனங்களில் ஒன்றான இன்டெல் மணியின் கடனளிப்பு கடந்த நிதியாண்டில் 69 சதவீதம் அதிகரித்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கட... மேலும் பார்க்க