செய்திகள் :

ஹோண்டா கோல்டு விங் டூரின் 50-வது ஆண்டு விழாவுக்கான பைக் அறிமுகம்!

post image

ஹோண்டாவின் கோல்டு விங் டூர் 50-வது ஆண்டுக்கான பதிப்பு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

50 ஆண்டுகளாக சொகுசு பயணங்களுக்கான அதிநவீன வசதிகளுடன் கூடிய பைக்குகளை தயாரித்துவரும் ஹோண்டா மோட்டர்சைக்கில் அண்ட் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் தனது ஹோண்டா கோல்டு விங் டூர் 50-வது ஆண்டுக்கான புதிய பதிப்பை இந்தியாவில் தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கின் விற்பனை டாப் டீலர்களிடம் மட்டும் துவங்கியுள்ளது.

சிறப்பம்சங்கள்

இந்த பைக்கில் நீண்ட தூர பயனாளர்களுக்கு ஏற்றவகையிலான சொகுசு இருக்கை, 7 அங்குல திரை, நேவிகேஷன், ஆடியோ கண்ட்ரோல், வயர்லெஸ் ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் கார்பிளே ஆகியவை உள்ளன.

மேலும், 50 ஆண்டு விழாவை ஒவ்வொரு முறையும் குறிப்பிடும் வகையில் பைக்கை ஆன் செய்யும் போது since 1975 எனத் திரையில் தோன்றும். அதோடுகூடவே மேம்படுத்தப்பட்ட ஸ்பீக்கர்கள், புளூடூத், 2 யுஎஸ்பி சி சாக்கெட், சக்கரத்தில் காற்று இருப்புக்கான மானிட்டர் சிஸ்டம் ஆகியவையும் உள்ளன.

முக்கிய விவரக் குறிப்புகள்

ஹோண்டா கோல்டு விங்கில் 1833cc லிக்விட் கூல்ட் என்ஜின், 4 ஸ்ட்ரோக் 24 வால்வுகளுடன் தட்டையான ஆறு சிலிண்டர்கள் 125 குதிரைத் திறனை வெளிப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில், 7 ஸ்பீட் கியர் பாக்ஸ் உள்ளது.

ABS மற்றும் ஏர்பேக் உள்ளிட்டவற்றுடன் இணைந்து பாதுகாப்பான சவாரிக்கு உத்தரவாதம் அளிக்கிறது இந்த கோல்டு விங் பைக். நான்கு சவாரி முறைகளுடன் வரும் இந்த பைக்கில் டூர், ஸ்போர்ட், எகான் மற்றும் ரெயின் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த பைக் போர்டோ சிவப்பு மெட்டாலிக் (Bordeaux Red Metallic colour) நிறத்தில் மட்டுமே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக குருகிராமில் கிடைக்கும் என்றும் இதன் விலை: ரூ.39.90 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 50-வது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில் இது கோல்டு விங் லட்சிணையுடன் since 1975 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: டாடாவின் பட்ஜெட்-ஃப்ரீ கார்! புதுப்பிக்கப்பட்ட அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்!

சர்வதேச விரிவாக்கத்திற்காக 30 ஏ-350 விமானங்களை கொள்முதல் செய்யும் இண்டிகோ!

புதுதில்லி: நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, 30 ஏர்பஸ்ஏ350-900 விமானங்களை நாட்டின் நீண்ட கால சர்வதேச விரிவாக்கத்திற்கான முயற்சிகளை அதிகரிக்கும் வகையில் கொள்முதல் செய்வதாக அறிவித்துள்ளது.க... மேலும் பார்க்க

டிஷ் டிவியின் 4-வது காலாண்டு இழப்பு ரூ.402.19 கோடி!

புதுதில்லி: டைரக்ட்-டு-ஹோம் நிறுவனமான டிஷ் டிவி இந்தியா லிமிடெட் மார்ச் முடிய உள்ள காலாண்டில் ரூ.402.19 கோடி ஒருங்கிணைந்த நிகர இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்ததுள்ளது.கடந்த வருடம் ஜனவரி முதல் மார்ச் வர... மேலும் பார்க்க

டாடாவின் பட்ஜெட்-ஃப்ரீ கார்! புதுப்பிக்கப்பட்ட அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்!

டாடா நிறுவனம் புதுப்பிக்கப்பட்ட அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் காரை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. பம்பர், கதவின் கைப்பிடிகளிலும் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. டாடாவின் பிரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக... மேலும் பார்க்க

வார இறுதியில் தங்கம் வாங்கலாமா? இதோ தங்கம் விலை நிலவரம்!

சென்னை: சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலையில் மாற்றமின்றி, ஒரு சவரன் தங்கம் ரூ.71,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.மே 26ஆம் தேதி இந்த வாரம் தொடங்கிய போது, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.71,600க்கு வ... மேலும் பார்க்க

வங்கி மோசடி வழக்குகள் குறைந்தன! ஆனால் சந்தோஷப்பட ஒன்றுமில்லை!! ஏன்?

கடந்த 2023-24ஆம் நிதியாண்டைக் காட்டிலும் நடப்பு நிதியாண்டில் வங்கி மோசடி வழக்குகள் குறைந்துள்ளன என்று ஆர்பிஐ ஆண்டறிக்கை தெரிவிக்கிறது.ஆனால், வங்கி மோசடி வழக்குகள்தான் குறைந்திருக்கிறதே தவிர, கடந்த நித... மேலும் பார்க்க

சரிவில் பங்குச் சந்தை! இன்றைய நிலவரம் என்ன?

பங்குச்சந்தைகள் நேற்று ஏற்றத்துடன் முடிவடைந்த நிலையில் இன்று(வெள்ளிக்கிழமை) சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,465.69 என்ற புள்ளிகளில் த... மேலும் பார்க்க