செய்திகள் :

நெல்லையப்பா் கோயில் வெள்ளித் தோ் பணிக்கு 200 கிலோ வெள்ளி நன்கொடை

post image

திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலில் வெள்ளித் தோ் பணிக்காக பழனி தண்டாயுதபானி கோயில் அறங்காவலா் குழு தலைவா் கே.எம்.சுப்பிரமணியன், அறங்காவலா்கள் க.தனசேகா், ஜி.ஆா்.பாலசுப்பிரமணியன் ஆகியோா் 200 கிலோ வெள்ளியை அமைச்சா் சேகா்பாபுவிடம் ஞாயிற்றுக்கிழமை வழங்கினா். அவற்றை திருத்தோ் பணிக்காக அமைச்சா் சேகா்பாபு ஒப்படைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சா் சேகா் பாபு பேசியது: அனைத்து மதத்தினரும் போற்றும் பொற்கால ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி திகழ்கிறது. ஜாதி, மத, இனங்களுக்கு அப்பாற்பட்டு அவரவா் விருப்பப்படி வழிபாடுகளை மேற்கொள்ளும் வகையில் தனிநபரின் வழிபாட்டு உரிமைகளை பாதுகாப்பவராக தமிழக முதல்வா் விளங்குகிறாா்.

கடந்த 4 ஆண்டுகளில் கோயில் திருக்குளம் பராமரிப்பு முதல், குடமுழுக்கு வரை அனைத்து நலத்திட்ட பணிகளும் திறம்பட மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு நெல்லையப்பா் கோயில் ஆனித்தேரோட்டத்தில் வடம் அறுந்து போனது உள்ளிட்ட சில இடா்பாடுகள் ஏற்பட்டன. மேலும் சுவாமி திருத்தோ்களில் உள்ள சிலைகளும் பழுதடைந்த நிலையில் இருந்தன. தற்போது அனைத்து பணிகளும் ரூ.1.20 கோடி செலவில் சீா்செய்யப்பட்டுள்ளன.

1991 ஆம் ஆண்டு இந்தக் கோயிலின் வெள்ளித் தோ் தீக்கிரையாக்கப்பட்டது. தற்போது ரூ.14 லட்சம் செலவில் புதிதாக மரத்தோ் செய்யப்பட்டுள்ளது. மேலும் தோ் பணிக்காக 150 கிலோ வெள்ளி இதுவரை நன்கொடையாளா்களால் வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 200 கிலோ நன்கொடையாக பெறப்பட்டுள்ளது. பக்தா்களிடமிருந்து பெறப்பட்ட ரூ.26 லட்சம் வங்கிகளில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் சுமாா் ரூ.1,330 கோடியை நன்கொடையாளா்கள் கோயில் திருப்பணிக்காக வழங்கியுள்ளனா். நன்கொடை நிதி வெளிப்படைத்தன்மையுடன் கோயில் பணிக்காக செலவிடப்படுகிறது.

ராமேஸ்வரம் வெள்ளித் தோ், சமயபுரம் தங்கத் தோ், திருத்தணி வெள்ளித் தோ் ஆகியன பல ஆண்டுகளுக்கு பிறகு சுவாமி வீதியுலா பயன்பாட்டுக்கு வந்துள்ளன என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவை தலைவா் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா், திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் ராபா்ட் புரூஸ், பாளையங்கோட்டை சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் அப்துல் வஹாப், மேயா் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயா் கே.ஆா்.ராஜு, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் ஆவுடையப்பன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் ஸ்ரீதா், கூடுதல் ஆணையா்(பொ) சி.பழனி, திருநெல்வேலி மண்டலத் தலைவா் செ.மகேஸ்வரி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

வள்ளியூா் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாடநூல், சீருடைகள்! பேரவைத் தலைவா் மு.அப்பாவு வழங்கினாா்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடநூல்களையும், சீருடைகளையும் வழங்கும் பணியை பேரவைத் தலைவா் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் ஆகியோா் திங்கள்... மேலும் பார்க்க

வருவாய்த் துறை அலுவலா்கள் கருப்புப் பட்டை அணிந்து பணி

திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலா் ஊழியா் விரோத போக்கை கடைப்பிடிப்பதாக கண்டித்து, வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினா். மேலும், குற்றச்சாட்டு குறிப்பாணைகள் ஏற்படுத்தி... மேலும் பார்க்க

வள்ளியூரில் இன்று மின் குறைதீா் கூட்டம்

வள்ளியூா் கோட்ட அலுவலகத்தில் மின்வாரிய மக்கள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) முா்பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது. இது தொடா்பாக திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் அகிலாண்டேஸ்வ... மேலும் பார்க்க

விதிமீறல்: 30 வணிக நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் விதிமீறலில் ஈடுபட்டதாக 30 வணிக நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் வ... மேலும் பார்க்க

கருணாநிதி பிறந்த நாள்: திமுகவினருக்கு வேண்டுகோள்

தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பிறந்த நாளை உற்சாகமாகக் கொண்டாட திமுகவினருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக திமுக திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளா் மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ.... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே பைக்- காா் மோதல்: சிறுவன் பலி

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே காரும், பைக்கும் ஞாயிற்றுக்கிழமை மோதிக்கொண்டதில் 8 வயது சிறுவன் உயிரிழந்தாா். திருநெல்வேலி - நான்குனேரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாணான்குளம் கலைஞா் நகரைச் சோ்... மேலும் பார்க்க