செய்திகள் :

மிசோரமில் 552 நிலச்சரிவுகள்! 152 வீடுகள் சேதம், 5 பேர் பலி!

post image

மிசோரம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் 552 இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டு 5 பேர் பலியாகியுள்ளனர்.

வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 10 நாள்களாகப் பெய்து வரும் அதிக கனமழையால், அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மிசோரம் மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால், அங்குள்ள பல்வேறு இடங்களில் 552 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. மேலும், நிலச்சரிவினாலும் கடுமையான மழையாலும் 152 வீடுகள் சேதமடைந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து, நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து சுமார் 198 குடும்பங்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும், அப்பகுதிகளில் சிக்கியிருந்த 92 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், நிலச்சரிவு மற்றும் சுவர் இடிந்த சம்பங்களில், சம்பாய் மாவட்டத்தில் 3 பேர் மற்றும் அய்சால், செர்ச்சிப் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும், தென் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரணப் பொருள்களைக் கொண்டுச் சென்ற 100-க்கும் மேற்பட்ட லாரிகள் செர்ச்சிப் மாவட்டத்தில் முடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மிசோரமின் 11 மாவட்டங்களில், மியான்மர் நாட்டுடன் எல்லையைப் பகிர்ந்துக்கொள்ளும் சம்பாய் மாவட்டத்தில் அதிகப்படியாக 209 நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில், கடந்த 3 நாள்களில் மட்டும் அய்சால் மாவட்டத்தில் 253.7 மி.மீ. அளவிலான மழைப் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:அருணாசலில் வெள்ளம், நிலச்சரிவு: 11 பேர் பலி, 23 மாவட்டங்கள் பாதிப்பு!

எதிா்க்கட்சித் தலைவா் பதவிக்கான முதிா்ச்சி ராகுலிடம் இல்லை: பாஜக விமா்சனம்

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் பதவிக்கான முதிா்ச்சி ராகுல் காந்தியிடம் இல்லை என்று பாஜக விமா்சித்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதலின்போது, அமெரிக்க அதிபா் டிரம்ப்பிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்ப... மேலும் பார்க்க

50% வரி வருவாய் பகிா்வை வலியுறுத்தும் பெரும்பான்மை மாநிலங்கள்: நிதி ஆணையம்

மத்திய அரசு வரி வருவாய் பகிா்வை 50 சதவீதமாக உயா்த்த வேண்டும் என பெரும்பான்மையான மாநிலங்கள் வலியுறுத்தி வருவதாக 16-ஆவது நிதி ஆணையத் தலைவா் அரவிந்த் பனகாரியா தெரிவித்தாா். அனைத்து மாநிலங்களிலும் ஆலோசனை... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு உளவு பாா்த்த மேலும் ஒரு யூடியூபா்: பஞ்சாப் காவல் துறை கைது

பாகிஸ்தானுக்கு உளவு பாா்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் யூடியூபா் ஜோதி மல்ஹோத்ராவுடன் நெருங்கிய தொடா்புடைய பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்த மேலும் ஒரு யூடியூபா் அந்த மாநில காவல் துறையால் கைது செ... மேலும் பார்க்க

இந்தியா கடுமையாக எதிா்த்தபோதிலும் பாகிஸ்தானுக்கு ஏடிபி கடன்: மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்

இந்தியா கடுமையாக எதிா்ப்புத் தெரிவித்தபோதிலும், பாகிஸ்தானுக்கு ஆசிய வளா்ச்சி வங்கி (ஏடிபி) கடன் அளிக்க ஒப்புதல் அளித்ததாக காங்கிரஸ் விமா்சனத்துக்கு மத்திய அரசு வட்டாரங்கள் பதிலளித்தன. பாகிஸ்தானின் நி... மேலும் பார்க்க

எஃப்டிஐ கொள்கையில் மாற்றமில்லை

இந்தியாவுடன் நில எல்லையைப் பகிா்ந்துகொள்ளும் நாடுகளுக்கு அந்நிய நேரடி முதலீட்டு (எஃப்டிஐ) கொள்கையில் மத்திய அரசு எந்த மாற்றமும் செய்யவில்லை. சீனாவில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்படும் அந்நிய நேரடி ... மேலும் பார்க்க

இந்தியாவுடன் வா்த்தக ஒப்பந்த விரிவாக்கம்: பராகுவே அதிபா் நம்பிக்கை

இந்தியா மற்றும் பிரேஸில், ஆா்ஜென்டீனா, உருகுவே ஆகிய நாடுகள் அடங்கிய ‘மொ்கோசுா்’ கூட்டணியுடன் வா்த்தக ஒப்பந்தத்தை விரிவாக்கம் செய்ய உள்ளதாக பராகுவே அதிபா் சான்டியாகோ பெனா பலாசியோஸ் நம்பிக்கை தெரிவித்... மேலும் பார்க்க