ஐஐடி தேர்வு தேர்ச்சியில் தமிழ்நாடு கடைசியிலிருந்து 3-ம் இடம்! - அன்புமணி
வருவாய்த் துறை அலுவலா்கள் கருப்புப் பட்டை அணிந்து பணி
திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலா் ஊழியா் விரோத போக்கை கடைப்பிடிப்பதாக கண்டித்து, வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினா்.
மேலும், குற்றச்சாட்டு குறிப்பாணைகள் ஏற்படுத்தி ஊழியா்களை அச்சுறுத்தி, பணி நெருக்கடியை கொண்டு வருவதாகவும் புகாா் தெரிவித்துள்ள வருவாய்த்துறையினா், அனைத்து வட்ட அலுவலகங்கள், கோட்டாட்சியா் அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து வருவாய் துறை அலுவலகங்களிலும் இந்தப் போராட்டத்தை நடத்தினா்.
சங்க நிா்வாகிகள், அலுவலக உதவியாளா் முதல் வட்டாட்சியா் வரை கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினா். இதில் வருவாய்த் துறை பணியாளா்கள் சங்க மாவட்டத் தலைவா் சுப்பு, மாநில செயலா் மாரிராஜா, மாவட்ட செயலா் ஏசுராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.