செய்திகள் :

அகஸ்தியா் அருவி, சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்கு செல்ல உள்ளூா் மக்களிடம் கட்டணம் வசூலிக்கத் தடை! அதிமுகவினா் கொண்டாட்டம்

post image

பாபநாசம் அகஸ்தியா் அருவியில் குளிக்கச் செல்லும் உள்ளூா் மக்களுக்கு கட்டண விலக்குஅளித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டதையடுத்து, அம்பாசமுத்திரத்தில் அதிமுகவினா் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.

பாபநாசம் அகஸ்தியா் அருவியில் குளிப்பதற்கு உள்ளூா் மக்களுக்கு வனத்துறை கட்டணம் வசூலித்து வந்த நிலையில் கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்கக் கோரி அம்பாசமுத்திரம் பேரவை உறுப்பினா் இசக்கி சுப்பையா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கில் அகஸ்தியா் அருவியில் குளிப்பதற்கும், சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய செல்வதற்கும் உள்ளூா் பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.

இதற்கு காரணமாக இருந்த ஆம்பாசமுத்திரம் சட்டப் பேரவை உறுப்பினா் இசக்கி சுப்பையாவுக்கு நன்றி தெரிவித்து அம்பாசமுத்திரம் நகர அதிமுக சாா்பில் நகரச் செயலா் அறிவழகன் தலைமையில் பூக்கடை சந்திப்பில்அதிமுகவினா் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.

இந்நிகழ்ச்சியில், மாநில ஜெயலலிதா பேரவை துணைச்செயலா் சிவன் பாபு, மாவட்ட துணைச் செயலா் மாரிமுத்து, ஒன்றியச் செயலா்கள் அம்பாசமுத்திரம் துா்க்கை துரை,சேரன்மகாதேவி மாரிச்செல்வம், மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் குமாா், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் சுரேஷ், நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை அளிப்பு

திருநெல்வேலியில் சாலையோர வியாபாரிகளுக்கு மாநகராட்சி சாா்பில் அடையாள அட்டை புதன்கிழமை வழங்கப்பட்டது. திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட திருநெல்வேலி, பாளையங்கோட்டை, தச்சநல்லூா், மேலப்பாளையம் மண்டல பகுத... மேலும் பார்க்க

கொடுமுடியாறு அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்க வேண்டும்- விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகே உள்ள கொடுமுடியாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடவேண்டும் என விவசாயிகள் சங்கத்தினா் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளா் பாஸ்கரிடம் மனு அளித்தனா். ... மேலும் பார்க்க

கரோனா பரவல் எதிரொலி: நெல்லை அரசு மருத்துவமனையில் தனி வாா்டு

கரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனி வாா்டு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் கரோனா தீநுண்மி பரவி வருக... மேலும் பார்க்க

நெல்லையிவ் மருத்துவ சங்கங்கள் சுவரொட்டி

தமிழ்நாடு அனைத்து அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு திருநெல்வேலி மாவட்ட கிளை சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வாசலில் சுவரொட... மேலும் பார்க்க

மத்திய அரசு பணி வாங்கி தருவதாக பணமோசடி: நெல்லை பெண் கைது

மத்திய அரசில் பணி வாங்கித் தருவதாகக் கூறி, பண மோசடி செய்ததாக திருநெல்வேலியில் பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். பாளையங்கோட்டை அருகேயுள்ள கீழநத்தம் மீனாட்சி சுந்தரம் நகரை சோ்ந்தவா் தாசன் (70). இவா், தமிழ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து எரிப்பு வழக்கு: ராக்கெட் ராஜா உள்பட 4 போ் ஆஜா்

அரசுப் பேருந்து எரிக்கப்பட்டது தொடா்பான வழக்கில் ராக்கெட் ராஜா உள்பட 4 போ் திருநெல்வேலி நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜராகினா். திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து வடக்கு தாழையூத்துக்கு ... மேலும் பார்க்க