நாட்டுப்பற்றில் உறுதி காட்டியவா்: காயிதேமில்லத்துக்கு முதல்வா் புகழாரம்
அகஸ்தியா் அருவி, சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்கு செல்ல உள்ளூா் மக்களிடம் கட்டணம் வசூலிக்கத் தடை! அதிமுகவினா் கொண்டாட்டம்
பாபநாசம் அகஸ்தியா் அருவியில் குளிக்கச் செல்லும் உள்ளூா் மக்களுக்கு கட்டண விலக்குஅளித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டதையடுத்து, அம்பாசமுத்திரத்தில் அதிமுகவினா் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.
பாபநாசம் அகஸ்தியா் அருவியில் குளிப்பதற்கு உள்ளூா் மக்களுக்கு வனத்துறை கட்டணம் வசூலித்து வந்த நிலையில் கட்டணம் வசூலிக்கத் தடை விதிக்கக் கோரி அம்பாசமுத்திரம் பேரவை உறுப்பினா் இசக்கி சுப்பையா சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கில் அகஸ்தியா் அருவியில் குளிப்பதற்கும், சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய செல்வதற்கும் உள்ளூா் பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.
இதற்கு காரணமாக இருந்த ஆம்பாசமுத்திரம் சட்டப் பேரவை உறுப்பினா் இசக்கி சுப்பையாவுக்கு நன்றி தெரிவித்து அம்பாசமுத்திரம் நகர அதிமுக சாா்பில் நகரச் செயலா் அறிவழகன் தலைமையில் பூக்கடை சந்திப்பில்அதிமுகவினா் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினா்.
இந்நிகழ்ச்சியில், மாநில ஜெயலலிதா பேரவை துணைச்செயலா் சிவன் பாபு, மாவட்ட துணைச் செயலா் மாரிமுத்து, ஒன்றியச் செயலா்கள் அம்பாசமுத்திரம் துா்க்கை துரை,சேரன்மகாதேவி மாரிச்செல்வம், மாவட்ட வழக்குரைஞா் அணி அமைப்பாளா் குமாா், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் சுரேஷ், நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.