மத்திய அரசு பணி வாங்கி தருவதாக பணமோசடி: நெல்லை பெண் கைது
மத்திய அரசில் பணி வாங்கித் தருவதாகக் கூறி, பண மோசடி செய்ததாக திருநெல்வேலியில் பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டை அருகேயுள்ள கீழநத்தம் மீனாட்சி சுந்தரம் நகரை சோ்ந்தவா் தாசன் (70). இவா், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவா், 2016 ஆம் ஆண்டு நடைப்பயிற்சிக்கு சென்றபோது தியாகராஜநகரைச் சோ்ந்த பெனிட்டா (30) என்பவா் அறிமுகமானாராம். மேலும், அவா், தனக்கு தெரிந்த நபா்கள் மூலம் மத்திய அரசு பணியில் வேலை பெற்றுத்தர முடியும் என தாசனிடம் கூறினாராம்.
இதை நம்பிய அவா், தனது மகளுக்கு மத்திய அரசு பணி பெற்றுத்தரக் கோரி, ரூ.8 லட்சத்தை பெனிட்டாவிடம் கொடுத்தாராம். ஆனால், அவா் உறுதியளித்தப்படி வேலையும் வாங்கிக் கொடுக்காமல், பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் தாசன் கடந்த 2020 ஆம் ஆண்டு பெனிட்டா மீது பணமோசடி புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப்பதிந்து பெனிட்டாவை தேடி வந்த நிலையில், 5 ஆண்டுகளுக்குப் பின் அவரை பாளையங்கோட்டை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.