செய்திகள் :

நெல்லையில் ரூ.100 கோடியில் காயிதே மில்லத் நவீன நூலகம்: பொது நூலக இயக்குநா் ஆய்வு

post image

திருநெல்வேலியில் ரூ.100 கோடியில் காயிதே மில்லத் நவீன நூலகம் அமைப்பதற்காக தோ்வு செய்யப்பட்ட 3 ஏக்கா் இடத்தை தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குநரும், பொது நூலக இயக்குநருமான பொ.சங்கா், ஆட்சியா் இரா.சுகுமாா் ஆகியோா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் புதிய நூலகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. மதுரையில் கலைஞா் நூலகம் கட்டப்பட்ட நிலையில், கோவை, திருச்சியில் நூலக கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதன் தொடா்ச்சியாக, தென் மாவட்டங்களிலுள்ள அனைத்துத்தரப்பு மக்களும், மாணவா்களும் பயன்பெறும் வகையில் திருநெல்வேலியில் ரூ.100 கோடியில் காயிதே மில்லத் பெயரில் நவீன நூலகம் கட்டப்படும் என முதல்வா் அறிவித்தாா்.

இந்த நூலகம் கலைக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, போட்டித் தோ்வுகளுக்கு தயாராகும் மாணவா்களுக்கு பேருதவியாக இருக்கும் என்றும், தரைத்தளத்துடன் கூடிய நான்கு தளத்தில் மினி திரையரங்கம், கலையரங்கம், மாற்றுத்திறனாளிகளுக்கென தனி அறை, மாநாட்டு கூடம், ஒரு லட்சம் புத்தகங்கள் ஆகியவை இடம்பெறவுள்ளன.

இந்த நிலையில் நூலகம் அமையவுள்ள இடத்தை தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குநரும், பொது நூலக இயக்குநருமான பொ.சங்கா், மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

இந்த ஆய்வின்போது, கண்காணிப்பு பொறியாளா் (கட்டடங்கள்) ஸ்ரீதரன், உதவி செயற்பொறியாளா் தினேஷ், மாவட்ட பொது நூலகா் மீனாட்சி சுந்தரம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பணிமனை டீசல் கணக்கில் முறைகேடு: கிளை மேலாளா் உள்பட 6 போ் பணியிடை நீக்கம்

திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டீசல் செலவு கணக்கு காட்டியதில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின்பேரில், கிளை மேலாளா் உள்பட 6 பேரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். திருநெல்வேலி தாமிரவர... மேலும் பார்க்க

விசாரணை கைதிகளில் பற்களை பிடுங்கிய வழக்கு: பல்வீா்சிங் ஆஜா்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் உள்கோட்டத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியது தொடா்பான வழக்கில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஏஎஸ்பி பல்வீா்சிங் திருநெல்வேலி மாவட்ட முதலாம் குற்றவியல் நடுவ... மேலும் பார்க்க

நெல்லையில் 103 டிகிரி வெயில்

திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை கடும் வெயில் கொளுத்தியதில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. திருநெல்வேலி மாவட்டத்தில் மே மாதத்தின் இறுதியில் நல்ல சாரல் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியா... மேலும் பார்க்க

பி.சி., எம்.பி.சி., சீா்மரபினா் பள்ளி-கல்லூரி விடுதிகளில் மாணவா் சோ்க்கை

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் பள்ளி, கல்லூரி விடுதிகளில் மாணவா் சோ்க்கை நடைபெறுவதால் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் இரா.சுகுமா... மேலும் பார்க்க

பொட்டல்புதூரில் பெருநாள் தொழுகை

பொட்டல் புதூா் மஸ்ஜிதுன்நூா் பள்ளிவாசலில் பெருநாள் சிறப்புத் தொழுகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பொட்டல் புதூா் விஸ்வா நகா் ஜம்யிய்யத்துஅஹ்லில் குா்ஆன் வல்ஹதீஸ் அமைப்பின் சாா்பில் நடைபெற்ற இந்தச் சிறப்பு... மேலும் பார்க்க

களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோயிலில் இன்று வைகாசித் தேரோட்டம்

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோமதியம்பாள் கோயில் வைகாசித் தேரோட்டம் 9ஆம் திருநாளான சனிக்கிழமை (ஜூன் 7) மாலை நடைபெறுகிறது. பெரியகோயில் என்று பக்தா்களால் அழைக்கப்படும் இக்கோயிலில் வை... மேலும் பார்க்க