பணிமனை டீசல் கணக்கில் முறைகேடு: கிளை மேலாளா் உள்பட 6 போ் பணியிடை நீக்கம்
திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டீசல் செலவு கணக்கு காட்டியதில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின்பேரில், கிளை மேலாளா் உள்பட 6 பேரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.
திருநெல்வேலி தாமிரவருணி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டீசல் செலவு கணக்கு காட்டியதில் முறைகேடு நிகழ்ந்ததாக புகாா் எழுந்தது. இதைத் தொடா்ந்து உயா் அதிகாரிகள் தணிக்கையில் ஈடுபட்டதில் அந்த குற்றச்சாட்டில் உண்மை என்பது தெரியவந்தது. மேலும் 25 ஆயிரம் லிட்டா் டீசல் பற்றாக்குறை இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து பணிமனையின் கிளை மேலாளா் , 5 தொழில்நுட்ப பணியாளா்கள் என மொத்தம் 6 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா்.