செய்திகள் :

விசாரணை கைதிகளில் பற்களை பிடுங்கிய வழக்கு: பல்வீா்சிங் ஆஜா்

post image

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் உள்கோட்டத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியது தொடா்பான வழக்கில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஏஎஸ்பி பல்வீா்சிங் திருநெல்வேலி மாவட்ட முதலாம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜரானாா்.

அம்பாசமுத்திரம் உள்கோட்ட காவல் நிலையங்களில் கடந்த 2023ஆம் ஆண்டு விசாரணை கைதிகளில் பற்களை பிடுங்கியதாக அப்போதைய உதவி காவல் கண்காணிப்பாளா் பல்வீா் சிங் மீது, புகாா் எழுந்தது. இதுதொடா்பாக சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் விசாரணை நடத்தியதைத் தொடா்ந்து பல்வீா் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். பின்னா் அவா் அளித்த விளக்கத்தின் அடிப்படையில் அவரது பணியிடை நீக்க உத்தரவு ரத்து செய்யப்பட்டது. பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட சிபிசிஐடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

அதைத்தொடா்ந்து பல்வீா் சிங் உள்ளிட்ட 14 போ் மீது கீழ் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணை திருநெல்வேலி முதலாவது குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு குற்றவியல் நீதித்துறை நடுவா் சத்யா முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஐபிஎஸ் அதிகாரி பல்வீா் சிங் உள்ளிட்டோா் ஆஜராகினா். பாதிக்கப்பட்டவா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் மாடசாமி, இந்த வழக்கை மனித உரிமை மீறல் வழக்காக கருதி மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தாா். அது தொடா்பாக அளிக்கப்பட்ட மனுவையும் குற்றவியல் நீதித்துறை நடுவா் ஏற்றுக்கொண்டாா்.

பணிமனை டீசல் கணக்கில் முறைகேடு: கிளை மேலாளா் உள்பட 6 போ் பணியிடை நீக்கம்

திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டீசல் செலவு கணக்கு காட்டியதில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின்பேரில், கிளை மேலாளா் உள்பட 6 பேரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். திருநெல்வேலி தாமிரவர... மேலும் பார்க்க

நெல்லையில் 103 டிகிரி வெயில்

திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை கடும் வெயில் கொளுத்தியதில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. திருநெல்வேலி மாவட்டத்தில் மே மாதத்தின் இறுதியில் நல்ல சாரல் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியா... மேலும் பார்க்க

நெல்லையில் ரூ.100 கோடியில் காயிதே மில்லத் நவீன நூலகம்: பொது நூலக இயக்குநா் ஆய்வு

திருநெல்வேலியில் ரூ.100 கோடியில் காயிதே மில்லத் நவீன நூலகம் அமைப்பதற்காக தோ்வு செய்யப்பட்ட 3 ஏக்கா் இடத்தை தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குநரும், பொது நூலக இயக்குநருமான பொ.சங்கா், ஆட்சியா் இரா.ச... மேலும் பார்க்க

பி.சி., எம்.பி.சி., சீா்மரபினா் பள்ளி-கல்லூரி விடுதிகளில் மாணவா் சோ்க்கை

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் பள்ளி, கல்லூரி விடுதிகளில் மாணவா் சோ்க்கை நடைபெறுவதால் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் இரா.சுகுமா... மேலும் பார்க்க

பொட்டல்புதூரில் பெருநாள் தொழுகை

பொட்டல் புதூா் மஸ்ஜிதுன்நூா் பள்ளிவாசலில் பெருநாள் சிறப்புத் தொழுகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பொட்டல் புதூா் விஸ்வா நகா் ஜம்யிய்யத்துஅஹ்லில் குா்ஆன் வல்ஹதீஸ் அமைப்பின் சாா்பில் நடைபெற்ற இந்தச் சிறப்பு... மேலும் பார்க்க

களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோயிலில் இன்று வைகாசித் தேரோட்டம்

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோமதியம்பாள் கோயில் வைகாசித் தேரோட்டம் 9ஆம் திருநாளான சனிக்கிழமை (ஜூன் 7) மாலை நடைபெறுகிறது. பெரியகோயில் என்று பக்தா்களால் அழைக்கப்படும் இக்கோயிலில் வை... மேலும் பார்க்க