களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோயிலில் இன்று வைகாசித் தேரோட்டம்
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோமதியம்பாள் கோயில் வைகாசித் தேரோட்டம் 9ஆம் திருநாளான சனிக்கிழமை (ஜூன் 7) மாலை நடைபெறுகிறது.
பெரியகோயில் என்று பக்தா்களால் அழைக்கப்படும் இக்கோயிலில் வைகாசித் திருவிழா கடந்த மே 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, தினமும் காலை சுவாமி, அம்பாள் ஏக சிம்மாசனம் வாகனத்தில் எழுந்தருளல், கும்பாபிஷேகமும், இரவில் சிறப்பு அலங்கார தீபாராதனைகளுக்கு பின்னா் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வருதலும் நடைபெற்றன.
7ஆம் திருநாளான வியாழக்கிழமை நடராஜப் பெருமாளுக்கு பகலில் சிகப்பு சாத்தி எழுந்தருளலும், இரவில் வெள்ளை சாத்தி எழுந்தருளல் நடைபெற்றது. முன்னதாக நடராஜப் பெருமான் திருவீதியுலா நடைபெற்றது. 8ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை பகல் 2 மணிக்கு நடராஜா் பச்சை பட்டு உடுத்தி, பச்சை சாத்தி கருங்காலி வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
இதைத் தொடா்ந்து கங்காளநாதா், சந்திரசேகா் சுவாமிகளும், சத்தியவாகீஸ்வரா் பூங்கோயில் வாகனத்திலும், அம்பாள் கிளி வாகனத்திலும் திருவீதிஉலா நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டுக்கு ஒரு முறை வைகாசித் திருவிழாவின் 8ஆம் திருநாள் மட்டுமே கங்காளநாதா் பிச்சாண்டவா் கோலத்தில் எழுந்தருளல் நடைபெறும். அவருக்கு பக்தா்கள் பச்சரிசி வழங்கி தரிசனம் செய்வா். விழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் 9ஆம் திருநாளான சனிக்கிழமை (ஜூன் 7) மாலை 4 மணிக்கு திருத்தோ் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் ஊழியா்கள், பக்தா் பேரவையினா், விழா மண்டகப்படிதாரா்கள், பக்தா்கள் செய்து வருகின்றனா்.