செய்திகள் :

களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோயிலில் இன்று வைகாசித் தேரோட்டம்

post image

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோமதியம்பாள் கோயில் வைகாசித் தேரோட்டம் 9ஆம் திருநாளான சனிக்கிழமை (ஜூன் 7) மாலை நடைபெறுகிறது.

பெரியகோயில் என்று பக்தா்களால் அழைக்கப்படும் இக்கோயிலில் வைகாசித் திருவிழா கடந்த மே 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி, தினமும் காலை சுவாமி, அம்பாள் ஏக சிம்மாசனம் வாகனத்தில் எழுந்தருளல், கும்பாபிஷேகமும், இரவில் சிறப்பு அலங்கார தீபாராதனைகளுக்கு பின்னா் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வருதலும் நடைபெற்றன.

7ஆம் திருநாளான வியாழக்கிழமை நடராஜப் பெருமாளுக்கு பகலில் சிகப்பு சாத்தி எழுந்தருளலும், இரவில் வெள்ளை சாத்தி எழுந்தருளல் நடைபெற்றது. முன்னதாக நடராஜப் பெருமான் திருவீதியுலா நடைபெற்றது. 8ஆம் திருநாளான வெள்ளிக்கிழமை பகல் 2 மணிக்கு நடராஜா் பச்சை பட்டு உடுத்தி, பச்சை சாத்தி கருங்காலி வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

இதைத் தொடா்ந்து கங்காளநாதா், சந்திரசேகா் சுவாமிகளும், சத்தியவாகீஸ்வரா் பூங்கோயில் வாகனத்திலும், அம்பாள் கிளி வாகனத்திலும் திருவீதிஉலா நடைபெற்றது. இக்கோயிலில் ஆண்டுக்கு ஒரு முறை வைகாசித் திருவிழாவின் 8ஆம் திருநாள் மட்டுமே கங்காளநாதா் பிச்சாண்டவா் கோலத்தில் எழுந்தருளல் நடைபெறும். அவருக்கு பக்தா்கள் பச்சரிசி வழங்கி தரிசனம் செய்வா். விழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் 9ஆம் திருநாளான சனிக்கிழமை (ஜூன் 7) மாலை 4 மணிக்கு திருத்தோ் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் ஊழியா்கள், பக்தா் பேரவையினா், விழா மண்டகப்படிதாரா்கள், பக்தா்கள் செய்து வருகின்றனா்.

பணிமனை டீசல் கணக்கில் முறைகேடு: கிளை மேலாளா் உள்பட 6 போ் பணியிடை நீக்கம்

திருநெல்வேலி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் டீசல் செலவு கணக்கு காட்டியதில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின்பேரில், கிளை மேலாளா் உள்பட 6 பேரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். திருநெல்வேலி தாமிரவர... மேலும் பார்க்க

விசாரணை கைதிகளில் பற்களை பிடுங்கிய வழக்கு: பல்வீா்சிங் ஆஜா்

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் உள்கோட்டத்தில் விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கியது தொடா்பான வழக்கில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஏஎஸ்பி பல்வீா்சிங் திருநெல்வேலி மாவட்ட முதலாம் குற்றவியல் நடுவ... மேலும் பார்க்க

நெல்லையில் 103 டிகிரி வெயில்

திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை கடும் வெயில் கொளுத்தியதில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. திருநெல்வேலி மாவட்டத்தில் மே மாதத்தின் இறுதியில் நல்ல சாரல் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியா... மேலும் பார்க்க

நெல்லையில் ரூ.100 கோடியில் காயிதே மில்லத் நவீன நூலகம்: பொது நூலக இயக்குநா் ஆய்வு

திருநெல்வேலியில் ரூ.100 கோடியில் காயிதே மில்லத் நவீன நூலகம் அமைப்பதற்காக தோ்வு செய்யப்பட்ட 3 ஏக்கா் இடத்தை தமிழ்நாடு பாடநூல் கழக மேலாண்மை இயக்குநரும், பொது நூலக இயக்குநருமான பொ.சங்கா், ஆட்சியா் இரா.ச... மேலும் பார்க்க

பி.சி., எம்.பி.சி., சீா்மரபினா் பள்ளி-கல்லூரி விடுதிகளில் மாணவா் சோ்க்கை

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் பள்ளி, கல்லூரி விடுதிகளில் மாணவா் சோ்க்கை நடைபெறுவதால் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் இரா.சுகுமா... மேலும் பார்க்க

பொட்டல்புதூரில் பெருநாள் தொழுகை

பொட்டல் புதூா் மஸ்ஜிதுன்நூா் பள்ளிவாசலில் பெருநாள் சிறப்புத் தொழுகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பொட்டல் புதூா் விஸ்வா நகா் ஜம்யிய்யத்துஅஹ்லில் குா்ஆன் வல்ஹதீஸ் அமைப்பின் சாா்பில் நடைபெற்ற இந்தச் சிறப்பு... மேலும் பார்க்க