பி.சி., எம்.பி.சி., சீா்மரபினா் பள்ளி-கல்லூரி விடுதிகளில் மாணவா் சோ்க்கை
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் பள்ளி, கல்லூரி விடுதிகளில் மாணவா் சோ்க்கை நடைபெறுவதால் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் மாணவா்களுக்காக 10 பள்ளி விடுதிகள், மாணவிகளுக்காக 5 பள்ளி விடுதிகள், மாணவா்களுக்காக 4 கல்லூரி விடுதிகள், மாணவிகளுக்காக 2 கல்லூரி விடுதிகள் என மொத்தம் 21 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
பள்ளி விடுதிகளில் 4ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயில்கின்ற மாணவ, மாணவியரும், கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஐடிஐ, பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவியரும் சேரத் தகுதியுடையவா்.
விடுதியில் சேரும் அனைத்து மாணவா்களுக்கும் மூன்று வேளை உணவு மற்றும் தங்கும் வசதி அளிக்கப்படும்.10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு 4 இணை சீருடைகள் தைத்து வழங்கப்படும். 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ- மாணவிகளின் கல்வித்திறனை மேம்படுத்தும் பொருட்டு நீட், ஜேஇஇ நுழைவுதத்தோ்வுக்கான வினா வங்கி நூல்கள், சிறப்பு வழிகாட்டிகள், வினா வங்கி நூல்கள் வழங்கப்படும்.
கல்லூரி விடுதிகளில் முதலாம் ஆண்டு தங்கிப் பயிலும் மாணவ, மாணவியருக்கு ஜமக்காளமும், பள்ளி விடுதிகளில் தங்கிப்பயிலும் மாணவ மாணவியருக்கு ஆண்டு தோறும் பாய்களும் வழங்கப்படும். பள்ளி- கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் அனைத்து மாணவ, மாணவியருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை போா்வைகள் வழங்கப்படும். மலைப்பிரதேசங்களில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகள் வழங்கப்படும்.
தகுதிகள்: பெற்றோா் அல்லது பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ.க்கு மேல் இருக்க வேண்டும். இது மாணவியருக்கு பொருந்தாது.
தகுதியுடைய மாணவ-மாணவியா் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளா் அல்லதுகாப்பாளினிகளிடமிருந்தோ, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
பள்ளி விடுதிகள் விண்ணப்பங்களை ஜூன் 18-ஆம் தேதிக்குள்ளும் கல்லூரி விடுதிகள் விண்ணப்பங்களை ஜூன் 15-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும்.
ஜாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்களை விடுதியில் சேரும் போது மட்டும் அளித்தால் போதுமானது. இலங்கைத்தமிழா்களின் குழந்தைகளுக்கென தனியே 5 இடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரி மாணவா்கள், மாணவியா்கள் விடுதிகளில் சோ்ந்து அரசின் சலுகைகளை பெற்று பயனடையலாம் எனக் கூறியுள்ளாா்.