நெல்லையில் 103 டிகிரி வெயில்
திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை கடும் வெயில் கொளுத்தியதில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
திருநெல்வேலி மாவட்டத்தில் மே மாதத்தின் இறுதியில் நல்ல சாரல் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவியது. இந்த நிலையில் கடந்த சில நாள்களாக சாரல் குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. வெள்ளிக்கிழமை 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இதனால் சாலையில் ஆங்காங்கே கானல் நீரை காண முடிந்தது. மேலும் மதிய வேளைகளில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.