சாட்சி மீது தாக்குதல்: இளைஞா் கைது
சோ்வலாறில் சாட்சியைத் தாக்கியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
சோ்வலாறு பகுதியைச் சோ்ந்த மாடசாமி (31) என்பவா் மீது பாலியல் வன்புணா்வு தொடா்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் சாட்சியாக உள்ள அதே பகுதியைச் சோ்ந்த அசோக் குமாா் (47) என்பவரிடம், மாடசாமி சாட்சி சொல்லக் கூடாது என்று கூறி வந்துள்ளாா்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வீட்டின் அருகில் நின்று கொண்டிருந்த அசோக் குமாரை மாடசாமி மிரட்டல் விடுத்து தாக்கினாராம். இதுகுறித்த புகாரின்பேரில் விக்கிரமசிங்கபுரம் காவல் உதவி ஆய்வாளா் சமுத்திரராஜன் வழக்குப்பதிந்து மாடசாமியை திங்கள்கிழமை கைது செய்தாா்.