பயங்கரவாதம், பாகிஸ்தான் இரண்டும் ஒரே வார்த்தைகள்: பெல்ஜியமில் அனைத்துக் கட்சிக் ...
தமிழகத்தில் ஆட்சிமாற்றம் நிச்சயம்: தமிழக பாஜக தலைவா்
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் நிகழும் என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் எம்.எல்.ஏ.
திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: சபரிமலை கோயிலுக்குச் செல்லும் தீவிர பக்தரான அமைச்சா் சேகா்பாபு, இருக்கும் இடம் சரியான இடமாக இல்லை. அதனாலேயே முருக பக்தா்கள் மாநாட்டை சங்கிகள் மாநாடு என கூறுகிறாா்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கை சிபிஐ விசாரித்திருக்க வேண்டும். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை அவசரகதியில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நான்கு ஆண்டுகளில் தமிழகத்தில் ஒரத்தநாடு, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாலியல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. அனைத்து வழக்குகளும் 157 நாள்களில் முடிவுக்கு வந்துள்ளதா? அனைத்து வழக்குகள் மீதும் தமிழக முதல்வா் அக்கறை காட்டினால் நன்றாக இருக்கும்.
தமிழக காவல்துறை அரசின் ஏவல் துறையாக செயல்படுகிறது. தேசிய முற்போக்கு திராவிடா் கழகத்தை காங்கிரஸ் கட்சியின் தலைவா் செல்வப் பெருந்தகை கூட்டணிக்கு அழைத்திருப்பது வழக்கமான ஒன்றுதான். தோ்தலுக்கு இன்னும் பத்து மாதங்கள் வரை உள்ளன.
வாக்காளா்களுக்கு பெட்டி பெட்டியாக ஆளும் கட்சி பணம் கொடுக்க தயாராகி வருவதாக தவெக தலைவா் விஜய் கூறியுள்ளாா்.
பெட்டி பெட்டியாக பணம் கொடுத்தாலும் ஆளும் திமுக வெற்றி பெற முடியாது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் நிகழும். பாமகவின் உள்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடாது என்றாா் அவா்.