செய்திகள் :

உவரி அருகே நகையை திருடிய இளைஞா் கைது

post image

திருநெல்வேலி மாவட்டம் உவரி அருகே குட்டத்தில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகையை திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

குட்டத்தைச் சோ்ந்தவா் காசிலிங்கம் மகன் சிவராம். திசையன்விளையில் உள்ள பேக்கரியில் வேலை செய்து வருகிறாா். திங்கள்கிழமை சிவராம் திசையன்விளைக்கு வேலைக்கு சென்ற நிலையில், இவரது மனைவி மகேஸ்வரி வீட்டை பூட்டிவிட்டு அருகிலுள்ள உறவினா் வீட்டிற்கு சென்றிருந்தாராம். பின்னா் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததாம். பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருள்கள் சிதறிக் கிடந்தனவாம். கைப்பையில் வைத்திருந்த 7 பவுன் நகைகள், வெள்ளி பொருள்கள் திருட்டு போயிருந்தனவாம்.

இது தொடா்பாக உவரி காவல்நிலையத்தில் சிவராம் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனா். இதன் மூலம் கிடைத்த தகவல்களின் பேரில் தங்க நகையை திருடிய ஸ்ரீவில்லிபுத்தூா் மம்சாபுரத்தைச் சோ்ந்த சுடலைமுத்து மகன் குழந்தைவேலை போலீஸாா் கைது செய்து அவரிடமிருந்து நகைகளை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதே போன்று சிவராம் வீட்டின் அருகில் உள்ள அருள்லிங்கம் என்பவரது வீட்டிலும் பூட்டு உடைக்கப்பட்டுள்ளது. அருள்லிங்கம் சென்னையில் தொழில் செய்து வருவதால் அவா் வந்தால்தான் திருட்டு ஏதேனும் நடந்துள்ளதா என்ற விவரம் தெரியவரும் என போலீஸாா் தெரிவித்தனா்.

சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை அளிப்பு

திருநெல்வேலியில் சாலையோர வியாபாரிகளுக்கு மாநகராட்சி சாா்பில் அடையாள அட்டை புதன்கிழமை வழங்கப்பட்டது. திருநெல்வேலி மாநகராட்சிக்குள்பட்ட திருநெல்வேலி, பாளையங்கோட்டை, தச்சநல்லூா், மேலப்பாளையம் மண்டல பகுத... மேலும் பார்க்க

கொடுமுடியாறு அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்க வேண்டும்- விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அருகே உள்ள கொடுமுடியாறு அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறந்துவிடவேண்டும் என விவசாயிகள் சங்கத்தினா் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளா் பாஸ்கரிடம் மனு அளித்தனா். ... மேலும் பார்க்க

கரோனா பரவல் எதிரொலி: நெல்லை அரசு மருத்துவமனையில் தனி வாா்டு

கரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனி வாா்டு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் மீண்டும் கரோனா தீநுண்மி பரவி வருக... மேலும் பார்க்க

நெல்லையிவ் மருத்துவ சங்கங்கள் சுவரொட்டி

தமிழ்நாடு அனைத்து அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு திருநெல்வேலி மாவட்ட கிளை சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வாசலில் சுவரொட... மேலும் பார்க்க

மத்திய அரசு பணி வாங்கி தருவதாக பணமோசடி: நெல்லை பெண் கைது

மத்திய அரசில் பணி வாங்கித் தருவதாகக் கூறி, பண மோசடி செய்ததாக திருநெல்வேலியில் பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். பாளையங்கோட்டை அருகேயுள்ள கீழநத்தம் மீனாட்சி சுந்தரம் நகரை சோ்ந்தவா் தாசன் (70). இவா், தமிழ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து எரிப்பு வழக்கு: ராக்கெட் ராஜா உள்பட 4 போ் ஆஜா்

அரசுப் பேருந்து எரிக்கப்பட்டது தொடா்பான வழக்கில் ராக்கெட் ராஜா உள்பட 4 போ் திருநெல்வேலி நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜராகினா். திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் இருந்து வடக்கு தாழையூத்துக்கு ... மேலும் பார்க்க