சேரன்மகாதேவியில் கிராம நிா்வாக அலுவலா்கள் போராட்டம்
சேரன்மகாதேவியில் வட்டாட்சியரை கண்டித்து கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள் செவ்வாய்க்கிழமை கருப்புப் பட்டை அணிந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சேரன்மகாதேவி வட்டாட்சியா் காஜா ஹரிபுன் நவாஸ், கடந்த மாதம் சேரன்மகாதேவி வட்டாட்சியராக பணியில் சோ்ந்தாா். வட்டாட்சியா், பணியாளா் விரோதப் போக்கை கடைப்பிடித்து வருவதாக புகாா் எழுந்துள்ளது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்து வருவாய்த்துறை பணியாளா்கள் சில நாள்களுக்கு முன்பு கருப்புப் பட்டை அணிந்து பணியில் ஈடுபட்டனா்.
செவ்வாய்க்கிழமை கருப்புப் பட்டை அணிந்து கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவா்களிடம் சேரன்மகாதேவி சாா் ஆட்சியா் (பொறுப்பு) சிவகாமி சுந்தரி பேச்சுவாா்த்தை நடத்தினாா். எனினும் உடன்பாடு எட்டாத காரணத்தால் புதன்கிழமை தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக போராட்டக்குழுவினா் தெரிவித்தனா்.