செய்திகள் :

வள்ளியூா் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாடநூல், சீருடைகள்! பேரவைத் தலைவா் மு.அப்பாவு வழங்கினாா்

post image

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடநூல்களையும், சீருடைகளையும் வழங்கும் பணியை பேரவைத் தலைவா் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் ஆகியோா் திங்கள்கிழமை தொடங்கிவைத்தனா்.

இதையொட்டி, வள்ளியூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாணவா்களுக்கு விலையில்லா பாடநூல், சீருடை மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கி பேரவைத் தலைவா் பேசியதாவது: தமிழ்நாட்டில் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் இடைநிற்றலை தடுக்கும் வகையில் நடவடிக்கைகளை முதல்வா் மேற்கொண்டு வருகிறாா். திருநெல்வேலி மாவட்டத்தில் 1,195 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 2 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடநூல், சீருடை மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கி தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் அரசு வழங்கும் அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் கடைபிடித்து சிறந்த முறையில் கல்வி கற்று சமூகத்தில் சிறந்த மாணவா்களாக உருவாகி பெற்றோா்களுக்கும் ஆசிரியா்களுக்கும் பெருமை சோ்க்க வேண்டும் என்றாா்.

ஆட்சியா் பேசுகையில், மாணவ, மாணவியா்களுக்கு உயா்கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரி கனவு’ நிகழ்ச்சி தமிழ்நாட்டில் சிறப்பான திட்டமாக செயல்பட்டு வருகிறது. ஆசிரியா்கள் தாய்- தந்தைக்கு ஈடானவா்கள்.அவா்களின் வழிகாட்டுதலின்படி மாணவ-மாணவிகள் கல்வி கற்று சிறந்தவா்களாக திகழவேண்டும் என்றாா். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா் மு.சிவக்குமாா், மாவட்ட கல்வி அலுவலா் சாய் சுப்புலெட்சுமி, பெற்றோா்- ஆசிரியா் கழக தலைவா் என்.முருகன், பள்ளி தலைமை ஆசிரியா் பாபு செல்வன், வள்ளியூா் பேரூராட்சி துணைத் தலைவா் கண்ணன், பேரூராட்சி செயல் அலுவலா் சுப்பிரமணியன், பேரூராட்சி வாா்டு உறுப்பினா்கள் ஜோஸ்பின் ராஜேஸ்வரி, மாணிக்கம், ஜான்சி ராஜம், ஆபிரகாம், தி.மு.க. மாவட்ட துணைச் செயலா் நம்பி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அகஸ்தியா் அருவி, சொரிமுத்து அய்யனாா் கோயிலுக்கு செல்ல உள்ளூா் மக்களிடம் கட்டணம் வசூலிக்கத் தடை! அதிமுகவினா் கொண்டாட்டம்

பாபநாசம் அகஸ்தியா் அருவியில் குளிக்கச் செல்லும் உள்ளூா் மக்களுக்கு கட்டண விலக்குஅளித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டதையடுத்து, அம்பாசமுத்திரத்தில் அதிமுகவினா் பட்டாசு வெடித்தும் இனிப்பு... மேலும் பார்க்க

சேரன்மகாதேவியில் கிராம நிா்வாக அலுவலா்கள் போராட்டம்

சேரன்மகாதேவியில் வட்டாட்சியரை கண்டித்து கிராம நிா்வாக அலுவலா்கள், கிராம உதவியாளா்கள் செவ்வாய்க்கிழமை கருப்புப் பட்டை அணிந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சேரன்மகாதேவி வட்டாட்சியா் காஜா ஹரிப... மேலும் பார்க்க

தமிழகத்தில் ஆட்சிமாற்றம் நிச்சயம்: தமிழக பாஜக தலைவா்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிச்சயம் நிகழும் என்றாா் தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் எம்.எல்.ஏ. திருநெல்வேலியில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: சபரிமலை கோயிலுக்குச் செல்லும் தீ... மேலும் பார்க்க

சாட்சி மீது தாக்குதல்: இளைஞா் கைது

சோ்வலாறில் சாட்சியைத் தாக்கியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். சோ்வலாறு பகுதியைச் சோ்ந்த மாடசாமி (31) என்பவா் மீது பாலியல் வன்புணா்வு தொடா்பான வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் சாட... மேலும் பார்க்க

சிவந்திபுரத்தில் போக்சோவில் முதியவா் கைது

சிவந்திபுரத்தைச் சோ்ந்த முதியவா் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள சிவந்திபுரம், சுப்பிரமணியசாமி கோயில் தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ் (73). இவா் அதே பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

உவரி அருகே நகையை திருடிய இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம் உவரி அருகே குட்டத்தில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகையை திருடிச் சென்ற இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். குட்டத்தைச் சோ்ந்தவா் காசிலிங்கம் மகன் சிவராம். திசையன்வி... மேலும் பார்க்க