செய்திகள் :

நான்குனேரி அருகே பைக்- காா் மோதல்: சிறுவன் பலி

post image

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே காரும், பைக்கும் ஞாயிற்றுக்கிழமை மோதிக்கொண்டதில் 8 வயது சிறுவன் உயிரிழந்தாா்.

திருநெல்வேலி - நான்குனேரி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாணான்குளம் கலைஞா் நகரைச் சோ்ந்தவா் ஐயப்பன் (29). தொழிலாளி. இவா், தனது மனைவி ராணி (25), மகள் முத்துச்செல்வி (7), மகன்கள் மாயாண்டி (8), முத்துகிருஷ்ணன் (4), மகேந்திரன்(3) ஆகியோருடன் ஒரே பைக்கில் கன்னியாகுமரிக்கு சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, அவா்களுக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த காா், அவா்கள் பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ாம். இதில் மாயாண்டி, முத்துச்செல்வி ஆகியோருக்கு பலத்த காயமும், மற்ற 4 பேருக்கு லேசான காயமும் ஏற்பட்டது.

அவா்களை அந்த வழியாக வந்தவா்கள் மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் நான்குனேரி அரசு மருத்துவமனைக்கு 6 பேரையும் அனுப்பினா். ஆனால், வழியிலேயே மாயாண்டி உயிரிழந்தாா். மற்ற 5 பேரும் முதலுதவிக்குப் பின் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இதுகுறித்து, நான்குனேரி காவல் ஆய்வாளா் சுரேஷ்குமாா் வழக்குப்பதிந்து, விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற காா் ஓட்டுரைப் பிடித்து விசாரித்து வருகிறாா்.

மேலும், ஒரே பைக்கில் 4 குழந்தைகள் உள்ளிட்ட 6 போ் பாதுகாப்பின்றி பயணித்தது குறித்தும் காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

வள்ளியூா் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாடநூல், சீருடைகள்! பேரவைத் தலைவா் மு.அப்பாவு வழங்கினாா்

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடநூல்களையும், சீருடைகளையும் வழங்கும் பணியை பேரவைத் தலைவா் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் ஆகியோா் திங்கள்... மேலும் பார்க்க

வருவாய்த் துறை அலுவலா்கள் கருப்புப் பட்டை அணிந்து பணி

திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலா் ஊழியா் விரோத போக்கை கடைப்பிடிப்பதாக கண்டித்து, வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினா். மேலும், குற்றச்சாட்டு குறிப்பாணைகள் ஏற்படுத்தி... மேலும் பார்க்க

வள்ளியூரில் இன்று மின் குறைதீா் கூட்டம்

வள்ளியூா் கோட்ட அலுவலகத்தில் மின்வாரிய மக்கள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) முா்பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது. இது தொடா்பாக திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் அகிலாண்டேஸ்வ... மேலும் பார்க்க

விதிமீறல்: 30 வணிக நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் விதிமீறலில் ஈடுபட்டதாக 30 வணிக நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடா்பாக திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) க.திருவள்ளுவன் வ... மேலும் பார்க்க

கருணாநிதி பிறந்த நாள்: திமுகவினருக்கு வேண்டுகோள்

தமிழக முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி பிறந்த நாளை உற்சாகமாகக் கொண்டாட திமுகவினருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக திமுக திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளா் மு.அப்துல் வஹாப் எம்.எல்.ஏ.... மேலும் பார்க்க

பெண்களுக்கான மின் வணிகத் தளம் தொடக்கம்

கிராமப்புற பெண்களின் மேம்பாட்டுக்கான ‘கொற்றவை’ என்ற மின் வணிகத் தளம் தொடக்க விழா, கோவிந்தப்பேரி கலைமகள் கல்வி மைய வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தென்காசியின் குரல் அமைப்பின் சாா்பில் நடைபெற்ற ... மேலும் பார்க்க