கன்னட மொழி விவகாரம்: கமல் கடிதம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு
பெங்களூரு: கன்னட மொழி விவகாரம் குறித்து, கர்நாடக ஃபிலிம் சேம்பருக்கு, நடிகரும், மநீம தலைவருமான கமல் எழுதிய கடிதம், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தக் லைஃப் படம் வெளியாகும் நிலையில், கர்நாடக ஃபிலிம் சேம்பருக்கு நடிகர் கமல் எழுதிய கடிதத்தில், கன்னட மொழியை சிறுமைப்படுத்தும் எண்ணம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
தக் லைஃப் படம் வெளியாகும் நிலையில் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது இன்று காலை முதல் விசாரணை நடைபெற்று வருகிறது.
கர்நாடகத்தில், தக் லைஃப் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிடக் கோரிய மனு மீதான விசாரணை, இன்று பிற்பகலில் மீண்டும் தொடங்கியபோது, கமல் எழுதிய கடிதம் நீதிமன்றத்தில்சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.